5 ஆண்டு வறட்சி.. தவித்த இந்தியா - போக்கிய “ஸ்கை”யின் சிக்சர் மழை.. இனி 4வது பேட்ஸ்மேன் “நோ டென்சன்”
கவுஹாத்தி: இந்திய அணியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக 4 வது பேட்ஸ்மேனுக்கான இடம் நிரப்ப முறையான வீரர் கிடைக்காத நிலையில், அதற்கான விடையாக கிடைத்திருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.
இந்திய கிரிக்கெட் அணியின் டாப் ஆர்டரில் ஓபனராக நிலையான இடத்தை பிடித்துவிட்டார் கேப்டன் ரோகித் ஷர்மா. அவருடன் கே.எல்.ராகுல் அல்லது ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக மாறி மாறி விளையாடி வருகிறார்கள்.
எனவே இந்திய அணியில் ஓபனிங் பேட்டிங்கில் அதிக சிக்கல் இல்லை. அடுத்ததாக இந்திய அணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 3 வது பேட்ஸ்மேனாக சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறார் கேப்டன் விராட் கோலி.
எனவே இந்திய அணியின் இந்த டாப் ஆர்டர் எப்போதுமே வலுவாக இருக்கிறது. அடுத்ததாக 5, 6, 7 வது இடங்களில் தோனி ஓய்வுக்கு முன் அவர், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர். தோனி ஓய்வுபெற்ற பின் அந்த இடம் ரிஷப் பண்டுக்கு கிடைத்தது.

4 வது பேட்ஸ்மேன்
ஆனால், யுவராஜ் சிங் பேட்டிங் செய்த 4 வது இடத்தில் அவருக்கு பதில் வேறு எந்த எந்த வீரரும் பொருந்திப்போகவில்லை. சுரேஷ் ரெய்னா இருக்கும் வரை அவர் சற்று அந்த இடத்தில் விளையாடி சமாளித்தாலும், பின்னர் ஃபார்ம் அவுட் ஆகி அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பிறகு பல வீரர்களுக்கு அந்த இடத்தில் இந்திய அணி வாய்ப்பு வழங்கியது.

சொதப்பிய வீரர்கள்
மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், விஜய் ஷங்கர் என பல வீரர்களை சோதனை முறையில் இந்திய அணி 4 வது பேட்டிங்கிற்கு முயற்சித்தது. ஆனால், அனைவரும் சொத்தப்பவே செய்தார்கள். விஜய் சங்கர் மட்டும் ஓரளவு நம்பிக்கையளிக்கும் வகையில் ஆடியதால் உலகக்கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

தேடி வந்த வாய்ப்பு
ஆனால், அதில் அவர் சொதப்பியதால் பிறகு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இத்தனை பேரை சோதனை செய்த பிறகு, இந்திய அணியில் தனக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று ரன் பசியில் காத்திருந்த அந்த வீரருக்கு தேடி வந்தது வாய்ப்பு. அவர் பெயர்தான் சூர்யகுமார் யாதவ். ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்த வாய்ப்பை பெற்றார் அவர்.

நிரூபித்த சூர்யகுமார்
இவரை ஏன் இவ்வளவு நாளாக தேர்வு செய்யவில்லை என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வருத்தப்படும் அளவுக்கு ஒவ்வொரு போட்டியிலும் தன்னை நிரூபித்து வரும் சூர்ய குமார் யாதவ், கடைசி 3 டி20 போட்டிகளிலும் அரைசதம் விளாசி 4 வது இடத்திற்கு என்னை விட தகுயான பேட்ஸ்மேன் வேறு யாருமில்லை என்ற எண்ணை அனைவர் மனதிலும் ஆழமாக விதைத்தை இருக்கிறார்.

இந்திய அணியின் நம்பிக்கை
இதற்கு முன் 4 வது இடத்தில் கோலோச்சிய யுவராஜ் சிங்கிடம் இருக்கும் அதிரடி ஆட்டம் சூர்யகுமார் யாதவிடம் இருக்கிறது. உலகின் தலைசிறந்த பவுலிங் வரிசையை கொண்ட ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகளை துவம்சம் செய்து வரும் சூர்யகுமார் யாதவ் டி20 உலகக்கோப்பை மட்டுமின்றி அடுத்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக திகழ்வார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications