காஷ்மீரில் ராணுவ தளபதி மீது வழக்கு விவகாரம்.. நிர்மலா சீதாராமன் மவுனம் கலைக்க சு.சுவாமி கெடு
சோபியான் விவகாரம் குறித்து நிர்மலா சீதாராமன் மவுனம் கலைக்க சுப்பிரமணியன் சுவாம் கெடு விதித்துள்ளது.
டெல்லி: ஜம்மு காஷ்மீரின் சோபியான் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ராணுவ தளபதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மவுனமாக இருப்பது ஏன் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 பேர் பலியாகினர்.

இச்சம்பவத்தையடுத்து ராணுவ தளபதி ஒருவர் உட்பட பாதுகாப்பு படையினர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது: சோபியான் விவகாரத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மவுனமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
ராணுவ தளபதி ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்தது சரி என்கிறாரா? இது கட்சியின் கொள்கைகளுக்கும் மக்களின் தேசப்பற்றுக்கும் எதிரானது. இந்த விவகாரம் தொடர்பாக தன்னுடைய நிலைப்பாட்டை பிப்ரவரி 2-ந் தேதிக்குள் நிர்மலா சீதாராமன் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் கிளப்புவேன். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications