கூலி வேலைக்கு சென்ற தெலுங்கானா 'சி.எம்.' மகன்: ஐஸ்க்ரீம் விற்று ரூ.7.5 லட்சம் சம்பாதித்தார்
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வரின் மகனும், கேபினட் அமைச்சருமான கே.டி. ராமா ராவ் இரண்டு மணிநேரம் ஐஸ்க்ரீம் விற்று ரூ. 7.5 லட்சம் சம்பாதித்துள்ளார்.
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதி கட்சியின் கூட்டத்திற்கு நிதி திரட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் குறைந்தது இரண்டு நாட்களுக்கு கூலி வேலை செய்ய வேண்டும் என்று கட்சியின் தலைவரும், தெலுங்கானா மாநில முதல்வருமான கே. சந்திரசேகர் ராவ் அறிவித்தார்.
இதையடுத்து கே. சந்திரசேகர் ராவின் மகனும், கேபினட் அமைச்சருமான கே.டி. ராமா ராவ் கூலி வேலைக்கு செல்ல முடிவு செய்தார்.

ஐஸ் க்ரீம் பார்லர்
ஹைதராபாத்தில் உள்ள குதுபுல்லாபூரில் இருக்கும் ஐஸ் க்ரீம் பார்லரில் வெள்ளிக்கிழமை கூலி வேலைக்கு சென்றார் கே.டி. ராமா ராவ். அவர் ஐஸ் க்ரீம் விற்க வந்துள்ளதை அறிந்து அரசியல் தலைவர்கள் அந்த கடையில் குவிந்தனர்.

விற்பனை
கே.டி. ராமா ராவ் இரண்டு மணிநேரம் ஐஸ்க்ரீம் விற்பனை செய்து ரூ. 6 லட்சம் சம்பாதித்தார். தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எம்.பி. மல்லா ரெட்டி ஒரு ஐஸ்க்ரீமை ரூ. 5 லட்சத்திற்கு வாங்கினார். அதே கட்சியை சேர்ந்த மற்றொரு தலைவரான ஸ்ரீனிவாஸ் ரெட்டி ரூ. 1 லட்சம் கொடுத்து ஐஸ்க்ரீம் வாங்கினார்.

ஜூஸ்
ஐஸ்க்ரீம் கடையை அடுத்து ஜூஸ் கடைக்கு வேலைக்கு சென்றார் கே.டி. ராமா ராவ். ஜூஸ் கடையில் அவர் ரூ. 1.30 லட்சம் சம்பாதித்துள்ளார். அங்கும் அரசியல் தலைவர்களால் தான் வியாபாரம் நடந்துள்ளது.

கட்சி கூட்டம்
கட்சி துவங்கப்பட்ட நாளை கொண்டாடும் விதமாக வரும் 27ம் தேதி வாரங்கலில் நடிக்கும் கூட்டத்திற்கு தான் இப்படி கூலி வேலை செய்து சம்பாதிக்கிறார்களம்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications