சாமியார் ராம் ரஹீம் மருத்துவமனையில் சரமாரியாக சட்ட விரோத கருக்கலைப்புகள்.. அதிர்ச்சியில் அதிகாரிகள்
சண்டிகர்: சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் மருத்துவமனையில் சட்டவிரோதமான வகையில் கருக்கலைப்புகள் நடத்தப்பட்டுள்ளதா என விசாரிக்க ஹரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாலியல் வன்முறை வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ள குர்மீத் ராம் ரஹிம்சிங்கின் தேர சச்சா அமைப்புக்குச் சொந்தமான மருத்துவமனை ஹரியான மாநிலம் சிர்ஸாவில் உள்ளது.
தேரா சச்சா அமைப்பு தொடர்பான இடங்களில், சோதனைகளை நடத்திய காவல்துறையினர், சிர்சாவில் உள்ள மருத்துவனையிலும் சோதனைகளை மேற்கொண்டனர்.

திடுக்கிடும் தகவல்
அப்போது, அங்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக சோதனையிட்ட அதிகாரிகள் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.

சிக்கலில் ராம் ரஹீம்
இதேபோல ஆவணங்கள் ஏதுமின்றி பல சடலங்களும், ஆசிரமத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ராம் ரஹீம் மீதான சட்டத்தின் பிடி மேலும் இறுகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விதிமுறை மீறல்கள்
சிர்சா துணை கமிஷனர் பிரப்ஜோத் சிங் கூறுகையில், "கர்ப்பகால சட்டத்தின்கீழ், உரிய மருத்துவ முறையில், கருக்கலைப்பு நடைபெறவில்லை. பல விதிமுறை மீறல்கள் தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்ந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

ரிப்போர்ட்டுகளால் அம்பலம்
விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சில கருக்கலைப்புகள் குறித்த அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ரிப்போர்டுகள் கிடைக்கவில்லை. ஒரு சம்பவத்தில், கரு நன்கு வளரவில்லை எந்று காரணம் கூறி கருக்கலைப்பு நடந்துள்ளது. ஆனால் அதே கரு நன்றாக இருந்ததாகத்தான், முந்தைய ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன" என்று தெரிவித்தார்.

உத்தரவு
இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்த ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனை டாக்டர்கள், நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications