1962-இல் சீனப் போரில் இந்தியாதான் வென்றதாம்... சொல்கிறது ம.பி. பாடப்புத்தகம்!
கடந்த 1962-ஆம் ஆண்டில் இந்தியா- சீனா இடையிலான போரில் இந்தியா வெற்றி பெற்றதாக மத்தியப் பிரதேச மாநில பாடப்புத்தகத்தில் தவறான தகவல் இடம்பெற்றுள்ளது.
போபால்: பிரதமராக ஜவாஹர்லால் நேரு இருந்தபோது 1962-இல் இந்தியா- சீனா இடையேயான போரில் இந்தியாதான் வெற்றி பெற்றது என்று மத்தியப் பிரதேசத்தின் பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டது.
இந்தியா- பூடான்- திபெத் ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமியில் சாலை அமைக்கும் பணியை சீனா கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. இதை இந்தியா தடுத்து நிறுத்தியதால் தற்போது எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பதற்றம் நிலவி வருகிறது.

சீன நாளிதழ்களும் இந்தியாவை சீண்டும் நோக்கத்தில் செய்தி வெளியிட்டு வருகின்றன. மேலும் 1962-இல் நடந்த போரில் இந்தியாவுக்கு சீனாவால் ஏற்பட்ட விளைவுகளை நினைத்து இந்திய படைகளை திரும்ப பெற வேண்டும் என்று சீனா பூச்சாண்டி காட்டுகிறது.
இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 8-ஆம் வகுப்புக்கான சம்ஸ்கிருத பாடப் புத்தகத்தில் 1962-ஆம் ஆண்டு சீனாவுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த புத்தகத்தில் இந்தியா மீது சீனா படையெடுத்தபோது பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேரு இந்திய படைகளையும், அவர்களின் மன உறுதியையும் எப்படி தயார்படுத்தினார் என்பது குறித்தும் அவரது முயற்சிகளால் 1962-இல் சீனா படையெடுத்த போது இந்தியா திறமையாக வெற்றி கண்டுள்ளதாகவும் இடம்பெற்றுள்ளது.
இந்தப் புத்தகத்தை பேராசிரியர் உமேஷ் பிரசாத் ராஸ்தோகி மற்றும் இலக்கண நிபுணர் சோம்தத் சுக்லா உள்பட 5 பேர் எழுதியுள்ளனர்.
-
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
இந்தியாவுக்கு வர வேண்டிய ஈரான் எண்ணெய் கப்பல்.. சீனாவுக்கு திடீர் யூ-டர்ன்.. நடந்தது என்ன? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது?












Click it and Unblock the Notifications