பெங்களூரின் பிரபல டெக்பார்க் நிறுவனம் ஜப்தி.. மாநகராட்சி நடவடிக்கையால் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் ஷாக்
பெங்களூர்: வரி பாக்கி வைத்துள்ள பெங்களூருவில் உள்ள பிரபல டெக்பார்க் நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டதால் அங்கு பணி புரியும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் அதிர்ச்சியைடந்தனர்.
வடக்கு பெங்களூரின், ஹெப்பால் பகுதி அருகே 424 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாய் அமைந்துள்ளது மான்யதா டெக் பார்க்.

இந்த கட்டிடத்தில் அமைந்துள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த கட்டுமான நிறுவனம், 2008-09 முதல் சொத்துவரி கட்டுவதில் மோசடி செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு சதுர அடிக்கு ரூ.10 சொத்து வரியாக செலுத்த வேண்டிய நிலையில் ரூ.8 மட்டுமே செலுத்தப்பட்டு வந்துள்ளது.
அசல் தொகை ரூ.83.45 கோடி மட்டுமே. ஆனால், வட்டி தொகையோடு சேர்த்து தற்போது மான்யதா டெக் பார்க் கட்ட வேண்டிய பணம் எவ்வளவு தெரியுமா? ரூ.273.95 கோடி. இந்த தொகையை மாநகராட்சிக்கு 3 நாட்களுக்குள் வழங்குமாறு சில தினங்கள் முன்பு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால், தொகையை மான்யதா டெக்பார்க் கட்டாத நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் இன்று மான்யதா டெக் பார்க் உள்ளே சென்று பொருட்களை ஜப்தி செய்தனர். இதனால் சாப்ட்வேர் ஊழியர்கள் அதிர்ச்சியைடந்தனர்.
சட்டப்படி, வரி பாக்கியை கட்ட நடவடிக்கை எடுப்பதாக மான்யதா பிரமோட்டர் நிறுவன மேலாண் இயக்குநரும், சேர்மனுமான ரெட்டி வீரண்ணா தெரிவித்துள்ளார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications