இந்தி மொழியை மேம்படுத்த 3 ஆண்டுகளில் ரூ.349 கோடி செலவு.. 30 மடங்கு அதிகம்
Recommended Video

லக்னோ: இந்தி மொழியை மேம்படுத்த 3 ஆண்டுகளில் 349 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
அண்மைக்காலமாக உள் மற்றும் வெளிநாடுகளில் இந்தி மொழிக்கு ஊக்கமளிக்கும் வகையில் மத்திய அரசு அதிகம் செலவு செய்கிறது. இந்தி மொழியை மேம்படுத்துவதற்காக 2009 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் மட்டும் 348.90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆர்.டி.ஐ. கேள்விக்கு மொழியியல்துறை இந்த பதிலைத் அளித்துள்ளது. பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் மற்ற மொழிகளுக்கு ஏன் அதே முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்று ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு அரசியலமைப்பின் 343 வது பிரிவின் கீழ் இந்தி ஒரு அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என மொழியியல் துறை பதில் தெரிவித்துள்ளது.
மொழியியல் துறையை தொடர்ந்து மனிதவள மேம்பாட்டு துறை தங்களின் மூன்று பயிற்சி நிறுவனங்கள் மூலம் இந்தி மொழியை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. சிஎச்டி, சிஐஎச், சிஎஸ்டிடி போன்ற பயிற்சி நிறுவனங்கள் மூலம் மனிதவள மேம்பாட்டுத்துறை இந்தி மொழியை பயிற்றுவித்து வருகிறது.
முன்னாள் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான கபில் சிபல் 2009 ஆம் ஆண்டு அனைத்து பள்ளிகளும் முதல் 2 மொழிகளுடன் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் 68000 அதிகாரிகள் மத்திய அரசின் இந்தி பயிற்சி நிறுவனங்கள் மூலம் இந்தி பயின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தி மொழியை பேசாத 20000 பேர் தொலைதூர கல்வி மூலம் இந்தி பயின்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications