மாறி மாறி 6 பேர்! வரதட்சணை தராத மனைவி! நண்பர்களுடன் சேர்ந்து.“அதை”வீடியோ வேறு எடுத்து! பரபர சம்பவம்
ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் வரதட்சணை தராததால் நண்பர்களுடன் சேர்ந்து தனது மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவிட்டதாக கணவன் மீது புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2020ஆம் ஆண்டில், நாட்டிலேயே அதிக பலாத்கார வழக்குகள் ராஜஸ்தான் மாநிலத்தில்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) அதிர்ச்சி தரும் தகவலை சமீபத்தில் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் மட்டும் 5,310 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ராஜஸ்தானை தொடர்ந்து உத்தரபிரதேசம் 2,769 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. அடுத்ததாக மொத்தம் 2,339 வழக்குகளுடன் மத்தியப் பிரதேசம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ராஜஸ்தானில் அதிர்ச்சி
குறிப்பாக மைனர் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கையிலும் ராஜஸ்தான் மாநிலமே முதலிடத்தில் உள்ளது. மாநிலத்தில் மைனர் சிறுமிகளுக்கு எதிராக 1,279 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு மட்டும் மொத்தம் 34535 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவை பதிவாகியை மட்டுமே உள்ளூர் பஞ்சாயத்துக்களில் பேசி தீர்க்கப்பட்டது லட்சக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது.

வரதட்சணை கொடுமை
இந்நிலையில் பெண்களுக்கு எதிரான மற்றொரு குற்றச் சம்பவத்தில் ராஜஸ்தானின் பரத்பூரில் 1.5 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுக்கத் தவறியதால், ஒரு நபர் தனது மனைவி நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. மொத்தம் 6 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அந்த பெண் எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் கேட்காமல் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

யூடியூப்பில் பதிவேற்றம்
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களது கொடூரமான செயலை வீடியோவை படம்பிடித்து யூடியூப்பில் பதிவேற்றியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தனது கணவர் மற்றும் மற்றவர்கள் மீது கமான் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின்படி, 2019 இல் திருமணத்திற்குப் பிறகு அவரது மாமியார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார்.

கடும் அதிர்ச்சி
அதைத் தொடர்ந்து அவர் தனது பெற்றோர் வீட்டிற்குத் திரும்பினார். இருப்பினும், அவரது கணவர் அவளை தனது வீட்டிற்கு அழைத்து சென்று சமாதானப்படுத்தியுள்ளார். சமீபத்தில், அவரது கணவர் தனது உறவினர்கள் 5 பேரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து தனது மனைவியை கூட்டு பலாத்காரம் செய்யுமாறு கூறினார். மேலும் இந்த சம்பவத்தை தனது ஸ்மார்ட்போனில் படம்பிடித்து ஆன்லைனில் பதிவேற்றியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், சம்பவத்தின் வீடியோ யூடியூப்பில் பதிவேற்றப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications