ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத குழுவில் இணைந்த மும்பை வாலிபர்கள் நாடு திரும்ப முடிவு
கல்யாண்: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ள மும்பை இளைஞர்கள் நாடு திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவை சேர்ந்த ஏழை இஸ்லாமிய இளைஞர்கள் சிலர், ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை பிடித்து வைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் மும்பையில் உள்ள கல்யாண் பகுதியை சேர்ந்த நான்கு வாலிபர்களான ஆரிப் மஜித், ஷகின் டாங்கி, பகத் ஷெய்க் மற்றும் அமன் டாண்டே ஆகியோர் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்தது சில தினங்களுக்கு முன் தெரியவந்தது.
சுற்றுலா குழுவினருடன் ஈராக் சென்ற அவர்கள் திடீரென காணாமல் போனார்கள். பின்னர் தங்களது குடும்பத்தினரை தொடர்பு கொண்ட நான்கு இளைஞர்களும் தாங்கள் ஐ.எஸ். தீவிரவாத குழுவில் இணைந்துள்ளதாக தெரிவித்தனர்.

நாடு திரும்ப முடிவு
சில தினங்களுக்கு முன் இக்குழுவில் உள்ள ஆரிப் மஜித் சிரியாவில் நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டதாக ஆரிப்பின் குடும்பத்தாரிடம் டாங்கி தெரிவித்துள்ளார். இந்நிலையில் எஞ்சியுள்ள மூவரும் நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாயமான இளைஞர்கள்
இவர்கள் கடந்த மே மாதம் பெற்றோருக்கு தெரியாமல் புனித பயணம் மேற்கொண்டவர்களுடன் ஈராக் சென்றதாக தெரிகிறது. இது தொடர்பாக புனித பயணம் மேற்கொண்டவர்களிடம் பெற்றோர் விசாரித்தனர். ஈராக் சென்றதும் அந்த இளைஞர்கள் தங்களை விட்டு பிரிந்து, போர் நடைபெறும் பலூஜா நகருக்கு சென்று விட்டதாக தெரிவித்தனர்.

இந்தியாவிற்கு எப்போது
கடந்த 6ஆம் தேதி தனது தாயையும் சகோதரனையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட டாங்கி இத்தகவலை தெரிவித்துள்ளார். ஆனால் வந்து சேருவதற்கான தேதியை அவர் குறிப்பிட்டு செல்லவில்லை.

தண்டனை இல்லை
இந்த மூன்று இளைஞர்களும் இந்தியாவில் எந்த வித குற்றச்செயல்களில் ஈடுபடாததால் அவர்கள் மீது எந்த விதத்திலும் நடவடிக்கை எடுக்க முடியாது என காவல்துறை வட்டாரங்களும் கருத்து தெரிவித்தன.

18 இந்தியர்கள்
சென்னை இளைஞர் உள்பட 18 இந்தியர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக மத்திய புலனாய்வு பிரிவு தகவல்கள் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications