உ.பி. சர்க்கரை ஆலையில் இருந்து வாயு கசிவு: 500 மாணவர்கள் மயக்கம்
உத்தரப்பிரதேச சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறிய வாயு கசிவை சுவாசித்த 500க்கும் அதிகமான மாணவர்கள் மயங்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி நகரில் சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறிய வாயு கசிவை சுவாசித்த 500-க்கும் அதிகமான மாணவர்கள் மயக்கமடைந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மருத்துவமனைகளில் குழந்தைகள் மரணம் தொடருகிறது. கோரக்பூர் மருத்துவமனையில் மட்டும் ஜனவரி முதல் இதுவரை அதிகாரப்பூர்வமாக 310 குழந்தைகள் இறந்து போயுள்ளனர்.
கடந்த சில நாட்களாக குழந்தைகள் மரணம் மீண்டும் தொடருகிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி நகரில் சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறிய வாயு கசிவை சுவாசித்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயங்கி விழுந்தனர்.
#Visuals Shamli: 300 students of Saraswati school ill due to use of chemical at a sugar mill nearby; doctor says no child is seriously ill. pic.twitter.com/I0HzrBIqgv
— ANI UP (@ANINewsUP) October 10, 2017
இவர்கள் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.