உத்தரகாண்ட்: காங்கிரஸ் விஸ்வரூபம்..பாஜகவிற்கு கடும் போட்டி..சொல்வது ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு
டேராடூன்: ரிபப்ளிக் டிவி - பி மார்க் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகளின் படி உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 35 முதல் 39 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மணிப்பூர் கோவா உத்தரகண்ட் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைந்து எடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கு தேர்தல் தேதிகளை அறிவித்தது.
மொத்தம் அங்கு 70 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக 46.51% வாக்குகளுடன் 56 இடங்களில் வெற்றி பெற்றது.

உத்தரகாண்ட் தேர்தல்
அடுத்ததாக காங்கிரஸ் கட்சி 33.49% வாக்குகளுடன் 11 இடங்களில் வென்று இரண்டாவது இடத்தை பெற்றது. தற்போதைய முதல்வராக புஷ்கர் சிங் தாமி உள்ள நிலையில், தற்போது தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தற்போதும் பாஜகவே உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என ரிபப்ளிக் டிவி - பி மார்க் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு வெற்றி
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 56 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தற்போதைய தேர்தலில் 35 முதல் 39 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் வாக்கு சதவீதம் 39.8 சதவீதம் ஆக இருக்கும் எனவும் ரிபப்ளிக் - பி மார்க் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி
அதேபோல கடந்த சட்டமன்றத் தேர்தலில் 11 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தற்போதைய தேர்தலில் 28 முதல் 34 இடங்கள் வரை கைப்பற்றும் எனவும், அக்கட்சியின் வாக்கு சதவீதம் பாஜகவை விட ஒரு சதவீதம் குறைந்து அதாவது 38.3 % ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது

மீண்டும் முதல்வர்
மலைப்பாங்கான பகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 0 முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் எனவும், இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 0-3 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய முதல்வர் புஷ்கர் சிங் தாமி காங்கிரஸின் புவன் சந்திர கப்ரியை எதிர்த்து தனது சொந்த தொகுதியான காதிமாவில் போட்டியிட்டார். இந்நிலையில் தற்போதும் அவரே வெற்றி பெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத்
முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் காங்கிரஸின் மக்களின் விருப்பமான முதல்வர் முகமாக கருதப்படுகிறார். லால்குவா தொகுதியில் போட்டியிட்டு பாஜகவின் மோகன் சிங் பிஷ்ட்டிடம் சவாலை எதிர்கொண்ட நிலையில், பாஜகவால் டிக்கெட் மறுக்கப்பட்ட பவன் சவுகானையும் அவர் சுயேச்சை வேட்பாளராக எதிர்கொண்டார். அவர் இத்தேர்தலில் பலத்த போட்டியை சந்தித்துள்ள நிலையில் அவரும் வெற்றியடைய வாய்ப்புள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications