பலாத்கார வழக்கை பதிவு செய்யாத போலீசாரை அடித்து உதைத்த கிராம மக்கள்
லக்னொ: பலாத்கார வழக்கை பதிவு செய்ய மறுத்த போலீசாரை பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் உத்தர பிரேதசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தின், பாசி கிராமத்திலுள்ள மயானத்தில் வைத்து, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார். இதுகுறித்து நேற்றுதான் அந்த பெண்ணின் உறவினர்கள் போலீசில் புகார் அளிக்க முன்வந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர், சாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகாரை ஏற்க போலீசார் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதை கேள்விப்பட்டதும், சுற்றுவட்டாரத்து கிராம மக்கள் சாபூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகாரை பெறுமாறு போராட்டம் நடத்தினர். போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், புகாரை பதிவு செய்ய மறுத்த காவல் நிலைய அலுவலரை மக்கள் தாக்க தொடங்கினர். மக்களிடம் இருந்து தப்பிக்க சாலைக்கு ஓடிய அந்த போலீஸ்காரரை துரத்தி சென்று மக்கள் அடித்து உதைத்தனர்.
தகவல் அறிந்ததும், மாவட்ட நீதிபதி குசால்ராஜ், சீனியர் எஸ்.பி எச்.என்.சிங் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மக்களை சமாதானப்படுத்த முயன்றபோது சீனியஸ் எஸ்.பியையும் மக்கள் தாக்க தொடங்கினர். அவரது சீருடையை கிழித்து அடித்து உதைத்தனர். புகாரை ஏற்க மறுத்தது மட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கும் போலீசார் அழைத்துச் செல்லவில்லை என்று மக்கள் கோஷமிட்டனர். நிலைமை கட்டுப்பாட்டை மீறுவதை அறிந்த மாவட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட பகுதியில் தற்போது அமைதி நிலவி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications