பொங்கி பிரவாகமாகக் கொட்டும் தூத்சாகர் அருவி... ரயிலை மூழ்கடித்துச்செல்லும் தண்ணீர் - வைரல் வீடியோ
தென்மேற்குப் பருவமழை கோவாவில் தீவிரமடைந்துள்ள நிலையில் தூத்சாகர் அருவியில் பெருவெள்ளம் கொட்டி வருகிறது.
கோவா: 40 ஆண்டுகள் காணாத அதி தீவிர கனமழை கோவாவில் கொட்டி வருவதால் அங்குள்ள தூத்சாகர் அருவியில் தண்ணீர் பிரவாகமெடுத்துள்ளது. அருவியில் இருந்து விழும் தண்ணீர் அபாய கட்டத்தை தாண்டி மாண்டோவி ஆற்றில் பெருவெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பாலத்தின் மேல் ரயில் நிறுத்தப்பட்டுள்ளதன் பின்னணியில் தூத்சாகர் அருவி ஆக்ரோஷமாக கொட்டும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா, கோவாவில் பெய்து வரும் மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. 10 நாட்களுக்கும் மேலாக விடாமல் கொட்டி வரும் மழையால் பல மாவட்டங்களில் நிலச்சரிவு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

கோவா, கர்நாடகா ரயில்பாதையில் உள்ள தூத்சாகர் அருவியில் பெருவெள்ளமென தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தூத் சாகர் அருவி பனாஜி நகரிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் கர்நாடக-கோவா எல்லையில் அமைந்திருக்கிறது.
மலை உச்சியில், சுமார் 310 மீட்டர் உயரத்திலிருந்து பிரம்மாண்ட கடலே மேலிருந்து வீழ்வது போன்று, பொங்கி வழிந்துவருவதால், தூத் சாகர் அருவியைப் பாற்கடல் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கிறார்கள். தூத் சாகர் அருவியின் அருகில் கால்லெம் ரயில் நிலையம் உள்ளது. ரயில் பாலத்தின் மீது அருவியின் பின்னணியில் ரயில் செல்லும்போது, அதைக் காணும் அனுபவம் பரவசமூட்டும்.
தற்போது கோவாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவிகளில் வெள்ளமென தண்ணீர் பொங்கி பிரவாகமெடுத்துள்ளது. அங்குள்ள பிரசித்தி பெற்ற தூத்சாகர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அருவிக்கு அருகில் உள்ள பாலத்தில் ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
WATCH: A train passing through Doodhsagar waterfall in South Western Railway, halted due to heavy rainfall. @RailMinIndia pic.twitter.com/lrGbfPpYbd
— Prasar Bharati News Services पी.बी.एन.एस. (@PBNS_India) July 28, 2021
ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயிலையும் தாண்டி தண்ணீர் கொட்டி வருவதால் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. அழகான இந்த காட்சிகள் இந்திய ரயில்வே அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications