பாஸ்போர்ட் பெற சாதாரண மக்கள் அல்லாடுகையில் எளிதில் வாங்கிய சோட்டா ராஜன்
மும்பை: நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு ஆஸ்திரேலியாவில் யாரோ இந்திய தூதரகத்தின் மூலம் இந்திய பாஸ்போர்ட் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்த மோகன் குமார் என்ற பெயரில் வழங்கப்பட்ட இந்திய பாஸ்போர்ட்டில் இந்தோனேசியா சென்றபோது தான் குடியேற்றத் துறை அதிகாரிகளால் பாலியில் கைது செய்யப்பட்டார்.
ராஜன் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெற்றுள்ளார். அவருக்கு கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதம் 8ம் தேதி புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தான் வைத்திருந்த பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது என்று கூறினாரா அல்லது புதிதாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தாரா என்று தெரியவில்லை.

அவர் தனது விண்ணப்பத்தில் எந்த பாஸ்போர்ட் எண்ணை குறிப்பிட்டார், இந்த பாஸ்போர்ட் எப்படி சரிபார்த்து அவருக்கு அளிக்கப்பட்டது என்ற கேள்விகள் எழுகிறது. இன்டர்போலால் தேடப்படும் ஒரு குற்றவாளிக்கு எப்படி பாஸ்போர்ட் கிடைத்தது? சாதாரண மக்கள் அனைத்து ஆவணங்களும் வைத்திருந்தாலும் பாஸ்போர்ட் பெற அல்லாடுகிறார்கள். ஆனால் ஒரு குற்றவாளியான சோட்டா ராஜன் போலி ஆவணங்களை அளித்து எளிதில் பாஸ்போர்ட் பெற்றுள்ளார் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாஸ்போர்ட் சட்டம் 1967ன் படி சிபிஐயின் இன்டர்போல் பிரிவு அல்லது பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரிகள் போலி ஆவணங்களை சமர்பித்து ஆள்மாறாட்டம் செய்து பாஸ்போர்ட் பெற்றதற்காக ராஜன் மீது வழக்குப்பதிவு செய்யலாம். இது குறித்த வழக்கு டெல்லியில் பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. யாருடைய உதவியும் இன்றி வெளிநாட்டில் இந்திய பாஸ்போர்ட் பெற முடியாது. ராஜன் விஷயத்தில் தீவிர விசாரணை தேவை என்று ஐபிஎஸ் அதிகாரி யோகேஷ் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இந்திய பாஸ்போர்ட் பெற ஒருவர் தனது கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் அண்மையில் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications