Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவா தேர்தல் களத்துக்கு இன்னும் முன்னரே போயிருந்தால் விஸ்வரூபம் எடுத்திருப்போம்... மமதா பானர்ஜி

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கோவா சட்டசபை தேர்தல் களத்துக்கு முன்கூட்டியே சென்றிருந்தால் கூடுதல் இடங்களைப் பெற்றிருப்போம் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் மார்ச் 10-ந் தேதி எண்ணப்படுகின்றன. இந்த தேர்தல்கள் தொடர்பாக எக்ஸிட் போல் முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டன.

கோவாவில் தொங்கு சட்டசபை

கோவாவில் தொங்கு சட்டசபை

கோவா, உத்தரகாண்ட், உ.பி, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் எக்ஸிட் போல் முடிவுகளில் கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் சில இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும்பான்மைக்கு தேவையான 21 இடங்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் எக்ஸிட் போல் முடிவுகள் கூறியிருந்தன. இதனால் கோவாவில் தொங்கு சட்டசபை உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கூட்டணி ஆட்சி

கூட்டணி ஆட்சி

இதனையடுத்து கோவாவில் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைப்பது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி ஆகியவற்றுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்துள்ளது. தற்போதைய நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தரும் கட்சியே ஆட்சி அமைக்க வாய்ப்பு பெறும் எனவும் தெரிகிறது. அதாவது முதன் முறையாக கோவா தேர்தல் களத்தை எதிர்கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்து நிற்கிறது.

அன்று காங். கோபம்

அன்று காங். கோபம்

இத்தனைக்கும் காங்கிரஸ் கட்சியின் மாஜி தலைவர்களைத்தான் திரிணாமுல் காங்கிரஸ் கோவாவில் வளைத்துப் போட்டு தமது கட்சியை உருவாக்கியது. இதில் காங்கிரஸ் மிகவும் கோபமடைந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுக்கும் மமதா பானர்ஜிக்கும் இடையே கருத்து மோதல்களும் வெடித்திருந்தன.

மமதா சொன்னது என்ன?

மமதா சொன்னது என்ன?

இந்நிலையில் கோவா எக்ஸிட் போல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த மமதா பானர்ஜி, பரவாயில்லை.. இன்னமும் முன்கூட்டியே தேர்தல் களத்துக்கு நாங்கள் வந்திருந்தால் கூடுதல் இடங்களைப் பெற்றிருப்போம் என்றார். மேலும் திரிபுரா, பீகார், உ.பி., ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களிலும் திரிணாமுல் காங்கிரஸை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வோம். 2024-ம் ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலை இலக்கு வைத்து எங்கள் நடவடிக்கைகள் தொடரும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+