‛‛உள்ளாடை’’ அணியுங்க.. இல்லாவிட்டால் நடவடிக்கை.. பாகிஸ்தான் விமான பணியாளர்களுக்கு ‛அட்வைஸ்’
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் விமான பெண் மற்றும் ஆண் பணியாளர்களுக்கு ஒரு அட்வைஸ் வழங்கப்பட்டுள்ளது. சரியாக உள்ளாடைகள் அணிய வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த விமான சேவைகள் பாகிஸ்தான் அரசின் விமான போக்குவரத்து துறை செயலாளரின் கட்டுப்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் சார்பில் தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆசிய நாடுகளுக்கு இந்த விமானங்கள் அதிகமாக இயங்கி வருகின்றன.

ஆடை குறித்து அறிவிப்பு
இந்நிலையில் தான் பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் சார்பில் அதன் ஊழியர்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் விமானத்தில் பணியாற்றும் கேபின் பணியாளர்களின் ஆடை அணியும் முறை பற்றி சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் மேலாளர் அமீர் பஷீர் சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எதிர்மறையான பிம்பம்
சில கேபின் பணியாளர்கள் உள்நாட்டில் இருநகரங்களுக்கு இடையேயான பயணத்தின்போதும், ஓட்டல்களில் தங்கும் போதும், பிற இடங்களுக்கு செல்லும்போதும் மிகவும் சாதாரணமாக உடை அணிகின்றனர். இது கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதுபோன்று ஆடை அணிவது கேபின் ஊழியர்கள் மட்டுமின்றி விமான நிறுவனத்தின் மீதும் பொதுமக்களுக்கு எதிர்மறையான பிம்பத்தை கட்டமைக்கிறது.

உள்ளாடைகள் அணிய...
எனவே, கேபின் பணியாளர்கள் முறையான அதோடு சரியான உள்ளாடைகளுக்கு மேல் சாதாரண ஆடைகள் அணிய வேண்டும். ஆண்களும் பெண்களும் அணியும் ஆடைகள் நமது கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்துக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். டிசிபி, எஸ்பி, எல்சிசி மற்றும் குரூமிங் அதிகாரிகள் அனைவரும் கேபின் பணியாளர்களை கண்காணிக்க வேண்டும். இதுபற்றி மெயில் மூலம் புகார் அளிக்க வேண்டும். இதனை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது. தற்போது இது பாகிஸ்தானில் விவாதப்பொருளாகி உள்ளது.

அதிகநேரம் பணி
ஏற்கனவே பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸில் பணியாற்றும் ஊழியர்கள் அதிக நேரம் பணி செய்ய வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக கேபின் ஊழியர்கள் ஏற்கனவே சர்வதேசய போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பு மூலம் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன் சிஇஓ அமீர் ஹயாத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் தான் தற்போது புதிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications