நெருங்கும் புனித வெள்ளி... தேவாலயத்தில் தற்கொலைப் படை தாக்குதல்... பலர் படுகாயம்.. விசாரணை தீவிரம்
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் உள்ள தேவாலயம் அருகே பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மக்காசரில் அமைந்துள்ள தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றுள்ளது. புனித வெள்ளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பலர் தேவாலயத்தில் கூடியிருந்தனர்.

அப்போது மோட்டர் சைகளில் வந்த இரண்டு பேர் தேவாலயத்தின் அருகே வந்ததும் மறைத்து வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். அப்பகுதியில் சில உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அது தாக்குதலை நடத்தியவர்களின் உடல் பாகங்களா அல்லது இதில் பொதுமக்கள் யாரேனும் உயிரிழந்துள்ளனரா என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை என்று போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேவாலயத்தின் பாதிரியார் வில்ஹெமஸ் துலாக் கூறுகையில், மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இருவர் தேவாலயத்தின் உள்ளே நுழைய முயன்றனர். இருப்பினும், அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அந்தச் சமயத்தில் திடீரென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும், இதில் 14 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. அப்பகுதியில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா வீடியோக்களின் அடிப்படையில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
இருப்பினும் இந்தத் தாக்குதலுக்குப் பின் ஜமா என்ற அன்ஷருத் தவுலா பயங்கரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என்று போலீஸ் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு கடந்த 2018ஆம் ஆண்டு இந்தோனேசிய சர்ச்சுகளில் நடத்திய தாக்குதலில் சுமார் 30 பேர் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications