For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் பேருந்தில் பயங்கர குண்டுவெடிப்பு... 9 சீன பொறியாளர்கள் உட்பட 12 பேர் பலி

Google Oneindia Tamil News

கைபர் பக்துன்கவா: பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஓடும் பேருந்தில் சக்திவாய்ந்த குண்டுவெடித்ததில் சீனாவின் 9 பொறியாளர்கள் உட்பட 12 பேர் பலியாகி உள்ளனர்.

பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவாவின் அப்பர் கோஹிஸ்தான் பகுதியில் அணை கட்டுமானப் பணியில் சீனா பொறியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த பகுதியானது ஆப்கான் எல்லையில் உள்ள சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கத்வார் துறைமுகத்தை இணைக்கக் கூடியது.

6 Chinese nationals and 2 Pakistani soldiers killed in Pak. Bus Blast

பாகிஸ்தானின் இந்த கத்வார் துறைமுகத்தை சீனா மேம்படுத்தி மிகப் பெரும் சவாலாக இருந்து வருகிறது. தெற்காசியா நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீனாவின் பட்டுப்பாதை திட்டத்திலும் இந்த பகுதி இடம்பெறுகிறது.

இங்கு அணை கட்டுமான பணியில் ஈடுபட்ட 30 சீனாவின் பொறியாளர்களுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் சீனாவின் 9 பொறியாளர்கள் உட்பட 12 பேர் பலியாகினர். இதில் 2 பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரும் அடக்கம்.

பேருந்துக்குள் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததா? அல்லது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடிக்க வைப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

English summary
At least 12 people, including at least 9 Chinese nationals were killed in a blast targeting a bus in a remote region of northern Pakistan on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X