நள்ளிரவில் நடந்த துயரம்! துருக்கி-ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 7 பேர் சடலமாக மீட்பு!

நிலநடுக்கம் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணிகள் தாமதமாகி வருகின்றன. அதேபோல உறைபனி நிலவுவதாலும் மீட்பு பணியில் சுணக்கம் நீடித்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

அங்காரா: துருக்கி-ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இதில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

EMSC-ன் அறிவிப்புப்படி நேற்று இரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக மேற்கு அஜர்பைஜான் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இங்குள்ள 'கோய்' நகரில் வீடுகள் பல இடிந்து விழுந்துள்ளன. மின்சாரம் தடைப்பட்டுள்ளதாலும், உறைபனி நிலவுவதாலும் மீட்பு பணிகள் தாமதமாகி வருகின்றன. தற்போது வரை 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

7 people were killed in a powerful earthquake on the Turkey-Iran border

துருக்கி-ஈரான் எல்லையில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 122 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் கோய் நகரத்திற்கு கூடுதல் மீட்ப்புப்படைகளை துருக்கி அனுப்பி வைத்திருக்கிறது. இங்குள்ள மருத்துவமனைகளிலும் நிலநடுக்கம் காரணமாக மின்சார தேவை துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே மாற்று மருத்துவமனைகளுக்கு பாதிக்கப்பட்டவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+