ஆப்பிரிக்க நாடுகளை பற்றி மகா மட்டமாக பேசிய டொனால்ட் ட்ரம்ப்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, ஆப்பிரிக்க யூனியன் நாடுகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
சர்ச்சை நாயகனான ட்ரம்ப் இப்போது ஆப்பிரிக்க நாடுகளை பற்றி பேசி மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் அகதிகளாக பலர் குடியேறி வருகின்றனர். அது குறித்த ஆய்வு கூட்டம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் செனட் உறுப்பினர்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். அப்போது ஹைதி மற்றும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்து அகதிகளாக குடியேறியவர்கள் குறித்து டிரம்ப் பேசினார்.
அப்போது அருவருக்க தக்க நாடுகளில் இருந்து வருபவர்களை நாம் ஏன் வரவேற்க வேண்டும். அவர்களால் அமெரிக்க பொருளாதாரம் எந்த விதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும், ஆங்கிலத்தில் ஒரு மோசமான வார்த்தையை குறிப்பிட்டு ஆப்ரிக்க நாடுகளை பற்றி, ட்ரம்ப் பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கு உடனடியாக அவரது குடியரசு கட்சி மற்றும் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் இணைந்தே கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இந்த பேச்சு பற்றி அறிந்த ஆப்பிரிக்க யூனியனில் உள்ள 55 நாடுகளும் டிரம்பின் பேச்சுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளன.
டிரம்பின் பேச்சு இனவெறியுடன் கூடியது என கண்டித்துள்ள அந்த நாடுகள் ட்ரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. ஆனால் தனது பேச்சில் உள்நோக்கம் எதுவும் இல்லை என டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
நெதன்யாகு-க்கு வேற சாய்ஸே இல்லை.. நெருக்கும் டிரம்ப்! ஈரான் தாக்குதலால் மீண்டும் ஹை டென்ஷன் -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications