370வது பிரிவு ரத்துக்கு பிறகே இதை நான் உணர்ந்தேன்.. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேச்சு
நியூயார்க்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் தான் தெரிந்தது. இந்திய அரசு ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல்களை பின்பற்றுகிறது என்பதை நான் உணர்ந்தேன் என பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலின் தலைவர் ரிச்சர்ட் என். ஹாஸ் உடன் உரையாடிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் விவகாரம் குறித்து பல்வேறு விஷயங்களை பேசினார்.

அப்போது இம்ரான்கான் பேசுகையில், "ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் தான் தெரிந்தது. இந்திய அரசு ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல்களை பின்பற்றுகிறது என்பதை நான் உணர்ந்தேன்.
பிரச்சனை என்னவென்றால் காஷ்மீர் பிரச்சனையில் வேறு யாரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட முயற்சிக்கும் போதெல்லாம் இரு தரப்பு பிரச்சனை என்று இந்தியா கூறுகிறது. ஆனால் இந்தியா எங்களுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதில்லை. நான் ஐநா சபையில் இந்த பிரச்சனையை பேசுவேன். ஐநா இதில் தலையிடும்.
சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின்னர் காஷ்மீரிகள் தங்கள் வீடுகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இப்போது நான் இந்தியாவுடன் எப்படி பேசுவேன்? சர்வதேச சமூகம் காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவை தளர்த்த வைக்கும் என நான் எதிர்பார்க்கிறேன்.
சிறுபான்மையினர் மற்றும் பெண்களை பாகிஸ்தான் அரசு பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது. இங்கு சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் நடைமுறைப்படுத்துவதில் தான் பிரச்சனை. பெண்களுக்கு உதவவும், சீக்கிய மற்றும் இந்து ஆலயங்களை மீட்டெடுக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.. எனது பாகிஸ்தானுக்கான பார்வை என்பது பெண்களுக்கு மற்றும் சிறுபான்மையினருக்கு சம உரிமை உண்டு" இவ்வாறு கூறினார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications