மொசூல் நகரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் விரட்டியடிப்பு.. இந்திய பணய கைதிகள் 39பேர் நிலை என்ன?
பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து மொசூல் நகரை ஈராக் ராணுவம் மீட்டுள்ள நிலையில், இந்திய பணயக் கைதிகள் 39 பேர் கதி என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு முதல், ஐஎஸ்ஐஎஸ்ஐ தீவிரவாதிககள், ஈராக்கில் பல்வேறு பகுதிகளை கைப்பற்ற ஆரம்பித்தனர். ஈராக்கின் முக்கிய நகரான மொசூல் நகரை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

ஈராக் ராணுவம் இந்த நகரை மீட்க கடுமையாக போராடி வந்தது. இந்த நிலையில் மொசூல் நகரை ராணுவம் கைப்பற்றிவிட்டதாக, அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபாதி, நேற்று அறிவித்தார்.
அதேநேரம், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடந்த 2014ம் ஆண்டு கடத்தப்பட்ட 34 இந்தியர்கள் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இந்த 39 பேரும் கட்டுமான தொழிலாளர்களாகும். கடத்தப்பட்ட மேலும் ஒரு இந்தியரான ஹர்ஜித் மஷித் மட்டும் எப்படியோ தீவிரவாதிகள் பிடியிலிருந்து தப்பியோடிவந்தார். அவர் அளித்த பேட்டியின்போது, 39 இந்திய தொழிலாளர்களையும் வரிசையாக வைத்து, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதாக தெரிவித்தார். இதனால் 39 தொழிலாளர்கள் குடும்பங்களிலும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், இந்திய வெளியுறவுத்துறையோ, அதுபோன்ற எந்த தகவலும் வரவில்லை என மறுப்பு தெரிவித்தது.
கடந்த மாதம் கூட வெளியுறவுத்துறை இதே கருத்தை கூறியது. ஆனால், மொசூல் நகர் மீட்கப்பட்ட நிலையிலும், இந்தியர்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. அந்த தொழிலாளர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்ற தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்த தகவல்களை இந்திய அரசு சேகரித்து வெளியிட தொழிலாளர்கள் குடும்பத்தார் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications