மொசூல் நகரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் விரட்டியடிப்பு.. இந்திய பணய கைதிகள் 39பேர் நிலை என்ன?
பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து மொசூல் நகரை ஈராக் ராணுவம் மீட்டுள்ள நிலையில், இந்திய பணயக் கைதிகள் 39 பேர் கதி என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு முதல், ஐஎஸ்ஐஎஸ்ஐ தீவிரவாதிககள், ஈராக்கில் பல்வேறு பகுதிகளை கைப்பற்ற ஆரம்பித்தனர். ஈராக்கின் முக்கிய நகரான மொசூல் நகரை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

ஈராக் ராணுவம் இந்த நகரை மீட்க கடுமையாக போராடி வந்தது. இந்த நிலையில் மொசூல் நகரை ராணுவம் கைப்பற்றிவிட்டதாக, அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபாதி, நேற்று அறிவித்தார்.
அதேநேரம், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடந்த 2014ம் ஆண்டு கடத்தப்பட்ட 34 இந்தியர்கள் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இந்த 39 பேரும் கட்டுமான தொழிலாளர்களாகும். கடத்தப்பட்ட மேலும் ஒரு இந்தியரான ஹர்ஜித் மஷித் மட்டும் எப்படியோ தீவிரவாதிகள் பிடியிலிருந்து தப்பியோடிவந்தார். அவர் அளித்த பேட்டியின்போது, 39 இந்திய தொழிலாளர்களையும் வரிசையாக வைத்து, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதாக தெரிவித்தார். இதனால் 39 தொழிலாளர்கள் குடும்பங்களிலும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், இந்திய வெளியுறவுத்துறையோ, அதுபோன்ற எந்த தகவலும் வரவில்லை என மறுப்பு தெரிவித்தது.
கடந்த மாதம் கூட வெளியுறவுத்துறை இதே கருத்தை கூறியது. ஆனால், மொசூல் நகர் மீட்கப்பட்ட நிலையிலும், இந்தியர்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. அந்த தொழிலாளர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்ற தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்த தகவல்களை இந்திய அரசு சேகரித்து வெளியிட தொழிலாளர்கள் குடும்பத்தார் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications