ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான விமான தாக்குதலில் ஆஸ்திரேலியா பங்கேற்பு!
சிட்னி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ள நிலையில், போர் விமானத்தைக் கொண்டு 2 குண்டுகளை வீசியதன் மூலம் தனது முதல் விமான தாக்குதலை அந்த நாடு நடத்தியுள்ளது.
எப்-18 ரக சூப்பர் ஃபைட்டர் ஜெட் விமானம் புதன்கிழமை இரவில், ஈராக்கில் தீவிரவாதிகள் நிலைகள் மீது, இரு குண்டுகளை வீசி தனது பங்களிப்பை பதிவு செய்துள்ளது.
இலக்குகளை குறிவைத்து சரியாக தாக்குதல் நடத்திய அந்த விமானம் பத்திரமாக தனது தளத்துக்கு வந்து சேர்ந்ததாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

தீவிரவாதத்துக்கு எதிரான போரில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் கைகோர்த்துள்ளதாக அறிவித்த ஆஸ்திரேலியா மேற்கொண்ட முதல் தாக்குதல் இதுவாகும். மேலும், தங்கள் நாட்டின் 200 ராணுவ வீரர்களை ஈராக்கிற்கு அனுப்பி வைக்கவும் ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய மக்களின் கழுத்தை அறுத்து கொலை செய்வோம் என்று ஐஎஸ்ஐஎஸ் மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை அந்த நாடு எடுக்க தொடங்கியுள்ளது. தீவிரவாதிகளுக்கு உதவுவோரை கண்டுபிடிக்க ஆஸ்திரேலியா முழுவதும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications