சிரியாவில் ரஷ்யா வான்வழித் தாக்குதல்... ஐ.எஸ். தீவிரவாதிகளே வலிமை பெறுவர்.... ஒபாமா 'வார்னிங்'
வாஷிங்டன்: சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதற்கு அமெரிக்கா அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யா நடத்தும் இந்த தாக்குதலால் ஐ.எஸ். தீவிரவாதிகள்தான் வலிமை பெறுவார்கள் என்றும் ஒபாமா எச்சரித்துள்ளார்.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக கடந்த 4 ஆண்டுகாலமாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்களான ப்ரீ சிரியா ஆர்மி என்ற இயக்கத்துக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்து ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது.

இதே சிரியாவின் சில பகுதிகளை உலகின் மிகக் கொடூரமான ஐ.எஸ். இயக்கம் கைப்பற்றியுள்ளது. இந்த ஐ.எஸ். இயக்கத்துடன் அல்நூஸ்ரா பிரண்ட் என்ற அல்கொய்தா அமைப்பு கை கோர்த்துள்ளது.
அதிபர் ஆசாத் பதவி விலக வலியுறுத்தி வரும் அமெரிக்கா ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக நேட்டோ படைகளுடன் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா களத்தில் குதித்தது.
ஆசாத்தை எதிர்க்கும் அனைவருமே பயங்கரவாதிகளே என்ற முழக்கத்துடன் ரஷ்யா, சிரியாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலில் அமெரிக்கா ஆதரவு குழுக்களும் சிக்கியுள்ளன. இதனால் ரஷ்யாவின் நடவடிக்கையை அமெரிக்கா தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவின் சிரியா தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா அதிபர் ஒபாமா முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இது தொடர்பாக ஒபாமா கூறியதாவது:
சிரியாவில் ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல் நடத்துவது சரியான நடவடிக்கை அல்ல. இதனால் ஆசாத் எதிர்ப்பு சக்திகள் ஒன்றிணைந்து ஐ.எஸ். தீவிரவாதிகள்தான் வலிமை பெறக் கூடிய நிலைமை உருவாகும்.
அதிபர் ஆசாத்தை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. ஆசாத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்ற ரஷ்யாவின் நிலைப்பாடு சரியானது அல்ல.
சிரியா விவகாரத்தில் அமெரிக்காவை குற்றம்சாட்டிக் கொண்டிருப்பதை ரஷ்யா அதிபர் புதின் நிறுத்த வேண்டும். சிரியா அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ஈரானுடன் இணையும் ரஷ்யாவுக்கு பின்விளைவுகள் மோசமானதாக அமையும். இத்தகைய நடவடிக்கைகளால் சிரியாவில் அமெரிக்கா - ரஷ்யா இடையிலான மறைமுகப் போரை ஏற்படுத்திவிட வேண்டாம்.
இவ்வாறு ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications