வரலாற்று சிறப்புமிக்க "பாஸ்டில் சிறை தகர்ப்பு" நாள் கொண்டாட்டத்தை இலக்கு வைத்த ஐஎஸ் தீவிரவாதிகள்
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டு மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடுகிற பாஸ்டில் சிறை தகர்ப்பு நாள் அல்லது தேசிய தினம் ஐஎஸ் தீவிரவாதிகளின் வெறிச்செயலால் கருப்பு தினமாக மாறிவிட்டது.
பிரான்சில் பல நூற்றாண்டுகாலமாக நீடித்து வந்த மன்னராட்சி முறைக்கு முடிவு கட்டும் விதமாக நடந்ததுதான் பிரெஞ்சு புரட்சி. உலகில் மன்னராட்சி முறைகளுக்கு எதிராக பெரும்பாலான புரட்சிகளுக்கு பிரெஞ்சு புரட்சியின் தாக்கம் உண்டு.
கம்யூனிசம் பேசிய ரஷ்யாவிலும் சீனாவிலும் கூட பிரெஞ்சு புரட்சியின் தாக்கம் உண்டு. இந்த பிரெஞ்சு புரட்சியுடன் பிரான்ஸில் மன்னராட்சி முறை, கிறித்துவ திருச்சபைகளின் அதிகாரம் அத்தனையும் மண்ணோடு மண்ணாகிப் போயின...

கில்லட்டின் இயந்திரத்தில்...
"பிரான்ஸின் மன்னர் பதினாறாம் லூயி கில்லட்டின் இயந்திரத்தின் மூலம் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது" என நாம் வரலாற்றுப் பாடங்களில் படித்த சம்பவம் நிகழ்ந்ததும் இந்த பிரெஞ்சு புரட்சியின் விளைவுதான்... மெல்ல மெல்ல பிரான்ஸ் மன்னருக்கும் திருச்சபைக்கும் எதிராக உருவெடுத்த கிளர்ச்சிகள் உச்சத்தை எட்டிய நாள் 1789-ம் ஆண்டு ஜூலை 14.

பிரெஞ்சு புரட்சிக்கு அடித்தளம்
பிரான்ஸ் மன்னர், திருச்சபைகளின் அதிகாரச் சின்னமாக இருந்தது பாஸ்டில் சிறையில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதக் கிடங்குதான்... இந்த ஆயுதக் கிடங்கைதான் பிரெஞ்சு புரட்சியாளர்கள் இலக்கு வைத்தனர். 1789-ம் ஆண்டு ஜூலை 14-ந் தேதி இந்த பாஸ்டில் சிறையை தகர்த்து புரட்சியாளர்கள் தங்கள் வசமாக்கினர். இதுதான் பிரெஞ்சு புரட்சியின் உன்னதமாக கருதப்படுகிறது.

தேசிய தினம்...
இதுவே பிரான்ஸில் மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலருவதற்கு அடித்தளமாக இருந்தது. ஆகையால் இந்த நாளை தங்களது நாட்டின் 'தேசிய தினமாக' கொண்டாடி வருகின்றனர் பிரான்ஸ் நாட்டு மக்கள்.

ராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கை
நமது நாட்டின் குடியரசு தினம் போல இந்த பாஸ்டில் சிறை தகர்ப்பு நாள் அல்லது பிரான்ஸின் தேசிய தினத்தில் அந்நாட்டு ராணுவ அணிவகுப்பு நடைபெறும். முக்கிய நகரங்களில் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்படும். இது பிரான்ஸ் மக்களுக்கு மரியாதைக்குரிய ஒரு விடுமுறை நாள்.

கருப்பு தினமானதே...
பிரான்ஸின் பெருநகரங்களில் மக்கள் பல்லாயிரக்கணக்கில் ஒன்று திரண்டு தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்துவர்... இப்படி மக்கள் ஒன்றுகூடுவதையே தங்களது இலக்காக வைத்து படுபயங்கரமான தாக்குதலை நடத்தி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை கருப்பு தினமாக்கிவிட்டனர் ஐஎஸ் கொடியவர்கள்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications