கொரோனா வைரஸெல்லாம் மனபிராந்தி.. வோட்கா குடிப்போம்.. வைரஸை கொல்வோம்.. சொல்வது ஒரு நாட்டின் அதிபர்
மின்ஸ்க்: கொரோனா வைரஸ் ஒரு மனநோய். எந்த மருந்தும் உட்கொள்ளாமலேயே கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தேன் என பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்ஸாண்டர் லுகான்சேன்கோ தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. 1.6 கோடி பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த பாதிப்பிலிருந்து மீள மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அத்துடன் நோய் அண்டாமல் இருக்க பல்வேறு மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நோய்க்கு தடுப்பு மருந்தை ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கண்டுபிடித்துவிட்டதாக சொல்லப்படுகின்றன.

மருந்து
எனினும் அவற்றை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்தால் மட்டுமே அந்த மருந்தை பயன்படுத்த முடியும். இந்த நிலையில் 9.5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பெலாரஸ் நாட்டில் இதுவரை கொரோனாவால் 67,366 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் 543 பேர் பலியாகிவிட்டனர். 61,442 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து மீண்டுள்ளனர்.

பெலாரஸ் நாட்டு அதிபர்
இந்த நிலையில் பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்ஸாண்டர் லுகான்சேன்கோவும் அறிகுறிகளே இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தற்போது அவர் குணமடைந்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் இப்போது கொரோனா தொற்றிலிருந்து எவ்வித மருந்தும் எடுத்துக் கொள்ளவில்லை. அவ்வாறு மருந்து உட்கொள்ளாமலேயே மீண்டு வந்துள்ளேன்.

97 சதவீதம்
மருத்துவர்கள் இது அறிகுறியற்ற நோய் என்று கூறுகிறார்கள். நம் நாட்டில் 97 சதவீதம் பேர் அறிகுறி இல்லாமலேயே இந்த நோய்க்கு பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அதனால் நாம் கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். இந்த நோய் ஒரு மன நோய்தான். அதனால் வோட்கா குடித்தபடி கொரோனாவை விரட்டிவிடுங்கள் என தைரியம் அளிப்பதாக நினைத்து தவறான தகவலை தெரிவித்துள்ளார் அதிபர்.

சந்திப்புகள்
1994 ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டின் அதிபர் லுகாசேன்கோதான். உலக நாடுகளே கொரோனா பாதிப்பில் முடங்கிக் கிடக்கும் நிலையில் மே மாதம் ராணுவ அணிவகுப்பை நடத்தினார். நெருக்கடியான காலகட்டத்திலும் தொடர்ந்து அரசு பணிகள், சந்திப்புகளை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிய வைரஸ்
இவரை போல் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனேரோவும் கொரோனா ஒரு சிறிய வைரஸ், எனது உடல் வீரனுடையது. இதில் இந்த சிறிய வைரஸ் என்ன செய்யும் என கேட்டு பொதுவெளியில் மாஸ்க் இல்லாமல் கலந்து கொண்டார். கட்டி அணைப்பது, கைகுலுக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டிருந்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications