பிரேசில் நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 5,11,272 பேர் பலி
பிரேசில் நாட்டில் கொரோனாவால் 79,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,83,22,760 பேராக உயர்ந்துள்ளது.
ரியோ டி ஜெனிரோ: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கையில் பிரேசில் நாடு 3வது இடத்தில் உள்ளது. ஒரே நாளில் பிரேசில் நாட்டில் கொரோனாவால் புதிதாக 79,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,83,22,760 பேராக உயர்ந்துள்ளது.
பிரேசில் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 1,990 பேர் மரணமடைந்தனர். கொரோனாவால் பிரேசில் முழுவதும் மொத்தம் 5,11,272 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து 1,65,48,159 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. 14,562 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மொத்தம் 3,44,81,765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஒரே நாளில் கொரோனாவிற்கு 377 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு மொத்தம் 619,135 பேர் பலியாகியுள்ளனர்
இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 49,052 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,01,82,469 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 1,186 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பினால் பலியானோர் எண்ணிக்கை 3,94,524 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 2,91,85,559 பேர் மீண்டுள்ளனர்.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,393 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 54 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 601 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,32,064 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications