ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு

Subscribe to Oneindia Tamil
ஏஎடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு
CHANDAN KHANNA/AFP/Getty Images)
ஏஎடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு

ஏடிஎம் இயந்திரங்கள் என்பது இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில் அத்தியவசியமான ஒன்றாகிவிட்டன.

தேவைப்படும்போது ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் இன்று யாரும் காசை கையில் வைத்துக் கொள்வதில்லை.

ஆனால் இந்த ஏடிஎம் இயந்திரங்கள் யாரால் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம் இந்த ஏடிஎம் இயந்திரங்கள் செயல்பாட்டிற்கு வந்து இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. உலகின் முதல் ஏடிஎம் இயந்திரம் லண்டன், என்ஃபீல்டில் உள்ள பார்க்லேஸ் வங்கிக் கிளையில் நிறுவப்பட்டது.

ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு
BBC
ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு
ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு
BBC
ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு

ஏடிஎம் இயந்திரம் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெபர்ட் பரோனால் கண்டுபிடிக்கப்பட்டது

இயந்திரத்தின் பொன்விழாவிற்கு மரியாதை செய்யும் விதமாக, அந்த ஏடிஎம் இயந்திரம் தங்கத்தால் மாற்றப்பட்டுள்ளது.

ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்த பரோனிற்கும் பார்க்லேஸ் வங்கி கிளைக்கும் ஏற்பட்ட துரித ஒப்பந்தங்களால் பார்க்லேஸ் கிளையில் ஏடிஎம் இயந்திரம் தொடங்கப்பட்டது.

"உலகெங்கிலும் அல்லது பிரிட்டனில் எனது பணத்தை நானே எடுத்துக் கொள்ள ஒரு வழி இருக்கும் என்று எனக்கு தோன்றியது" என 2007 ஆம் பிபிசியிடம் தெரிவித்தார் பரோன். மேலும் சாக்லெட் வழங்கும் இயந்திரத்தை பார்த்து தனக்கு ஏடிஎம் இயந்திரத்திற்கான யோசனை வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு
Getty Images
ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு

ஆட்டோமேடட் டெல்லர் மெஷின் (Automated Teller Machine) என்று அழைக்கப்படும் இந்த ஏடிஎம் இயந்திரங்கள் 1967ஆம் ஆண்டு பெரும் விழாக் கோலத்துடன் நிறுவப்பட்டது.

முதல்முதலில் தொலைக்காட்சி பிரபலமான ரெக் வார்னே என்பவர், வவுச்சர் ஒன்றை செலுத்தி பின் ஆறு இலக்க எண்ணை அழுத்தி பத்து மொரமொரப்பான ஒரு பவுண்ட் நோட்டுகளை அந்த இயந்திரத்தில் பெற்றுள்ளார்.

அதன்பின் ஒன்பது நாட்களுக்கு பிறகு தனது நாட்டில் வடிவமைப்பட்ட ஏஎடிஎம் இயந்திரத்தை ஸ்வீடன் அறிமுகம் செய்தது.

இன்று உலகம் முழுவதும் மூன்று மில்லியன் ஏஎடிஎம் இயந்திரங்கள் உள்ளன.

தங்களுக்கு தேவையான பணத்தை தேவையான சமயத்தில் எடுத்துக் கொண்டு பண பரிவர்த்தனையில் மக்கள் தாங்கள் விரும்பும்படியான சேவையை பெற்று வருவதற்கு இது வித்திட்டுள்ளது.

பிபிசியின் பிற செய்திகள்:

அண்டை நாடுகளின் நிபந்தனைகளை கத்தார் நிறைவேற்ற இயலாது: டில்லர்சன்

சிரியாவில் மீண்டும் ஒரு ரசாயன தாக்குதல் நடத்த திட்டம்?

வீதியில் நீதி வழங்கும் இந்தியா, பாகிஸ்தான்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+