இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவுக்கு இன்று அழைத்து வரப்படுகிறார் சோட்டா ராஜன் !
பாலி: இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன், இன்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என இண்டர்போல் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அங்கு எரிமலை சீற்றத்தால் விமானச் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சோட்டா ராஜனை இந்தியா அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை தொடர் குண்டு வெடிப்பை நடத்திய தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த சோட்டா ராஜன் இந்தோனேஷியா பாலி தீவில் கடந்த மாதம் 25-ம் தேதி பிடிபட்டார். இந்தோனேசியா போலீசாரின் பாதுகாப்பில் உள்ள அவரை இந்தியா அழைத்து வர சனிக்கிழமை மாலை சி.பி.ஐ. குழு இந்தோனேசியா சென்றது. அவர்களுடன் டெல்லி, மும்பை போலீசாரும் சென்றனர். இந்த குழு ஞாயிற்றுக்கிழமை காலை பாலி சென்றடைந்தது.

பாலியில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை இந்த குழுவினர் சந்தித்தனர். அதன் பின்னர் சோட்டா ராஜனை இந்தியா அழைத்து வருவதற்கான அனைத்து வேலைகளிலும் இவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில், சோட்டா ராஜன் உயிருக்கு தொடந்து அச்சுறுத்துல் இருப்பதால் அவரை ஏர்போட்டுக்கு அழைத்து வரும் வழியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சோட்டா ராஜனுக்கு அதிகபட்ச பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு இடையே இன்றிரவே அல்லது நாளை காலை மும்பை அழைத்து வரப்படும் சோட்டா ராஜன், ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications