தென் சீனா கடற்பரப்பில் ஏவுகணைகளை குவிக்கும் சீனா!
பெய்ஜிங்: சர்ச்சைக்குரிய தென் சீனா கடற்பரப்பில் சீனா ஏவுகணைகளை நிறுத்தியிருப்பதால் அப்பிராந்தியத்தில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இயற்கை வளம் நிறைந்த கடல் வழிப் போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தென் சீனா கடற்பரப்பின் பெரும்பகுதியை சீனா சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால் வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய நாடுகள் சீனாவின் உரிமை கோரலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் தென் சீனா கடற்பரப்பில் சட்டவிரோதமாக செயற்கை தீவுகளை சீனா அமைத்து போர் விமானங்களை நிறுத்தி வைத்திருக்கிறது. சீனாவின் இந்த சட்டவிரோத செயற்கை தீவுகள் அருகே அமெரிக்கா போர்க்கப்பல்களை ரோந்து பணிக்கு அடிக்கடி அனுப்பி வருகிறது.
மேலும் இக்கடற்பரப்பில் இந்தியாவுடன் இணைந்து கூட்டு ரோந்து மேற்கொள்வது தொடர்பாக அமெரிக்கா பேசுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியாவோ, ஐநாவின் பன்னாட்டுப் படைகளின் கீழ்தான் ரோந்து பணியில் ஈடுபட முடியும் என கூறிவருகிறது.
அமெரிக்காவின் இந்த கூட்டு ரோந்து முயற்சிக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய தீவுப் பகுதிகளில் சீனா ஏவுகணைகளை நிறுத்தி வைத்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 14-ந் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் உட்டி என்கிற தீவுகளில் இந்த ஏவுகணைகள் நிறுத்தப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது. 40 ஆண்டுகாலத்துக்கும் மேலாக இந்த உட்டி தீவுகளை சீனா தன் வசம் வைத்திருந்தாலும் தைவான் மற்றும் வியட்நாம் நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன.
சீனாவின் இந்த மும்முரமான ராணுவ நகர்வால் தென்சீனா கடற்பரப்பில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் பயணிக்கலாம்.. ஈரான் அனுமதி.. ஜெய்சங்கர் தரமான சம்பவம் -
சார் உங்களுக்கு ஒரு சல்யூட்! நள்ளிரவில் ரயில் நிலையத்தில் தவித்த பெண்! யோசிக்காமல் உதவிய ராணுவ வீரர் -
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. நாடாளுமன்றத்தில் கொந்தளித்த எதிர்க்கட்சி எம்பிக்கள்! -
ஈரானை ஏமாற்றிய இந்திய மாலுமி.. ஹார்முஸ் ஜலசந்தியை தந்திரமாக கடந்து மும்பை வந்து சேர்ந்தது எப்படி? -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
கைவிரித்த வெளியுறவுத்துறை.. இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி கொடுத்ததா? - பெரிய ட்விஸ்ட் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
அடுத்து லாக்டவுன் தானா? அப்படியே கொரோனா மாதிரி.. முதலில் கேஸ் சப்ளை, இப்போ ஹோட்டல் மூடல்.. திக்திக் -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
கிட்ட வந்த ஆசாமி.. மாஜி முதல்வர் மீது துப்பாக்கி சூடு.. NSG செய்த செயலால் நூலிழையில் தப்பினார்!












Click it and Unblock the Notifications