இது 2வது முறை.. சர்வதேச தீவிரவாதிகளை பாதுகாக்கிறதா சீனா? இந்தியாவின் தீர்மானத்திற்கு முடக்கம்
ஜெனீவா: இந்தியா மற்றும் அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதியான சஜித் மிர்-ஐ சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்கிற அமெரிக்காவின் தீர்மானத்தை சீனா நிறுத்தி வைத்துள்ளது.
ஐநா சபையில் இதற்கான முன்மொழிவை அமெரிக்கா வைத்தது. இதற்கு இந்தியா தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. ஆனால் சீனா இந்த தீர்மானத்தை நிறுத்தி வைத்துவிட்டது.
கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த சதி திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டவர்தான் சஜித் மிர்.

மும்பை தாக்குதல்
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சதி திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட சஜித், பாகிஸ்தானிலிருந்து இந்த திட்டத்திற்காக இந்தியாவிலிருந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளை இயக்கினார் என குற்றம் சாட்டப்பட்டது. இந்த தாக்குதலில் உயிரிழந்த 166 பேரில் 6 பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்பதால் இதற்கு காரணமானவர்களை அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பும் தேட தொடங்கியதில்தான் இந்த உண்மைகள் வெளிவந்தன.

தீர்மானம்
இதனையடுத்து சஜித்தின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசையும் அந்நாடு அறிவித்தது. இதனைத் தொடர்ந்துதான் ஐநா சபையில், சஜித் மிரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா தீர்மானத்தை முன்மொழிந்தது. இதற்கு இந்தியா தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்தை சீனா தனது அதிகாரத்தை பயன்படுத்தி கிடப்பில் போட்டு விட்டது. தற்போது சஜித் பாகிஸ்தானில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

முதல்முறையல்ல
இதேபோன்று ஏற்கெனவே உலக நாடுகள் நெருக்கடியை ஏற்படுத்தியபோது சஜித் இறந்துவிட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால் உலக நாடுகள் இதனை நம்பவில்லை. இதற்கான ஆதாரத்தையும் கேட்டன. இந்த பின்னணியில்தான் இந்த தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது. இந்த விவகாரத்தில் சீனாவின் செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சீனா இதுபோன்ற முடிவுகளை மேற்கொள்வது இதுதான் முதல் முறையானது அல்ல.

மோஸ்ட் வாண்டட்
ஏற்கெனவே, ஜெய்ஷ்-இ முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரரும் இந்த பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவருமான அப்துல் ரவூப் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்காவும் இந்தியாவும் கோரிக்கை வைத்தபோது அந்த கோரிக்கையை சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சஜர் மிர், எஃப்பிஐ அமைப்பின் தீவிரமாக தேடப்படுவோர் பட்டியலில் இருக்கிறார்.
-
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை?












Click it and Unblock the Notifications