ஆப்கனில் இந்திய, பாகிஸ்தான் தூரகங்கள் அருகே குண்டு வெடிப்பு, துப்பாக்கி சண்டை
காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள இந்திய துணை தூதரகங்களின் அருகே இன்று அடுத்தடுத்து குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடந்துள்ளன. பாகிஸ்தான் தூதரகமும் அருகேயுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
ஆப்கனின், ஜலாலாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சுமார் 200 மீட்டர் அருகே இன்று காலை வெடிகுண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
இச்சம்பவம் நடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே தூதரகத்தை சுற்றி துப்பாக்கிச் சூடு தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

3வது தாக்குதல்
கடந்த 10 நாட்களில் இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்படும் 3-ஆவது தாக்குதல் இதுவாகும். தூதரகத்தில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.

அமைதி பேச்சுக்கு குந்தகம்
தலிபான்களுடன் பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலையிலும், இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை துவங்க இருந்த நிலையிலும் இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

பாக். மீது சந்தேகம்
ஏற்கனவே இந்திய தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் தான் காரணம் என ஆப்கான் போலீசார் அறிக்கை அளித்துள்ள நிலையில், இன்று மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல், துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்துவருவது பாகிஸ்தான் மீதான சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.

விவரம்
இத்தாக்குதலில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை, சண்டை முடிவுக்கு வந்த பிறகு முழு தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications