சமூக ஊடகங்களில் உண்மையைவிட பொய் வேகமாகப் பரவுகிறது: ஆய்வில் தகவல்
பொய்ச் செய்திகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவுவதாக புதிய ஆய்வு கூறுகின்றது.
வாஷிங்டன்: சமூக ஊடகங்களில் உண்மையான செய்திகளைவிட பொய்ச் செய்திகள் வேகமாகப் பரவுவதாக அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.
செல்போனில் உலகம் சுருங்கி விட்ட நிலையில், சமூக ஊடகங்கள் வாயிலாக எந்தவொரு செய்தியும் நொடியில் உலகம் முழுவதும் பரவி விடுகிறது. இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் விஷமிகள், சமயங்களில் உண்மையைத் திரித்து பொய்ச்செய்திகளைப் பரப்பி விடுகின்றனர்.

ஆனால், உண்மைச் செய்திகளைவிட பொய்யானவை சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி விடுகிறதாம். இது குறித்து அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதற்காக 2016-17 ஆண்டு என இரண்டு ஆண்டுகளில் 1,26,000 பேரின் டிவிட்கள் கண்காணிக்கப்பட்டன.
இந்த ஆய்வின் முடிவில், உண்மையைவிட பொய்ச் செய்திகள் 70 சதவீதம் அதிகமாகப் பகிரப்படுகின்றன என்பது தெரிய வந்துள்ளது. அதாவது, ஒரு உண்மையான செய்தி பகிரப்படும் நேரத்தில் 6 பொய்யான செய்திகள் பரவிவிடுகின்றன.
இதற்கு முக்கியக் காரணம் மக்கள் புதிய மற்றும் வித்தியாசமான செய்திகளை விரும்புவதே ஆகும் என இந்த ஆய்வு கூறுகிறது. இதனால், பொய்யான செய்திகளால் ஆர்வமடைந்து, அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் மக்கள் அதனை பகிர்ந்து விடுகின்றனர் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற பொய்யான செய்திகள் நாட்டில் முக்கிய நிகழ்வுகள் குறிப்பாக தேர்தல் நடைபெறும் போது வெளிவருவதாக இந்த ஆய்வு கூறுகின்றது.
இது போன்ற பொய்யான செய்திகள் பரவுவதை தடுக்க, சமீபத்தில் டிவிட்டர் நிறுவனம் பல புதிய நிபந்தனைகளைக் கொண்டு வந்தது நினைவிருக்கலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications