கல்லூரி நிறுவனர் உள்பட பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 4 பேர் பாகிஸ்தானில் கைது
கராச்சி: பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கல்லூரி நிறுவனர் உள்பட 4 பேர் கராச்சியில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக, கராச்சி காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவர் ராஜாஉமர் கத்தாப் கூறுகையில், பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்த சதி செய்தது, நிதி உதவி அளித்தது, தாக்குதல் நடத்தியவர்களை மூளைச் சலவை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையில் ஆதில் மசூத் பட், காலீத் யூசுப் பாரி, சலீம் அகமது, முகமது சுலைமான் சயீத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் ஆதில் மசூத் பட், கராச்சியில் பள்ளிக் கல்வி முடித்து, இரு அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மேற்கல்வி பயின்றவர். பாகிஸ்தான் திரும்பிய அவர், கராச்சியில் வணிகக் கல்விக்கான கல்லூரியை நிறுவி நடத்தி வருகிறார்.
கைதான மற்றொருவர் பாகிஸ்தான் அரசு விமான நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றியவர். கைது செய்யப்பட்ட இரு நபர்களின் மனைவிகளும் பெண்களிடையே பயங்கரவாதிகளுக்கு ஆதரவும் நிதியும் திரட்டி வந்தனர்.
காலீத் யூசுப் பாரியின் மனைவி நடத்தி வந்த கல்வி நிலையம் மூலம் செல்வாக்கு மிகுந்த பெண்களிடையே பயங்கரவாதிகளுக்கு ஆதரவும் நிதியும் திரட்டினார். கல்வி நிலையங்கள் மூலம் பயங்கரவாதிகள் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தி வந்தனர் என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, சிந்து மாகாணத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் கூர்மையாகக் கண்காணித்து வருகிறோம் என அவர் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications