ஹாங்காங் தமிழ் பண்பாட்டுக் கழகம் நடத்திய 'மகளிர் மட்டும்' நிகழ்ச்சி
ஹாங்காங்: ஹாங்காங் தமிழ் பண்பாட்டுக் கழகம் நடத்திய மகளிர் மட்டும் நிகழ்ச்சி கடந்த மாதம் 17 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது.
ஹாங்காங் தமிழ் பண்பாட்டுக் கழகம் மகளிர் மட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. பெண்களுக்காக, பெண்களால் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 17 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஹாங்காங்கில் வசிக்கும் ஏராளமான தமிழ் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெண்களுக்கு சமையல், கலை மற்றும் கைவினை, ஓவியம், ரங்கோலி, மெஹந்தி, இந்த வார சூப்பர் மனைவி உள்பட பல போட்டிகள் நடத்தப்பட்டது.
மேலும் இசை, நாடகம், நடனம், கவிதை வாசிப்பு உள்ளிட்ட மேடை நிகழ்ச்சிகள் நடந்தது. இது தவிர கண்கவர் ஃபேஷன் ஷோ, நகைச்சுவை நாடகம் ஆகியவையும் நடத்தப்பட்டது.
மகளிர் மட்டும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.












Click it and Unblock the Notifications