அமெரிக்கா: முறையற்ற சிகிச்சை... அபராதமாக ரூ2.5 கோடி தர இந்திய டாக்டர் சம்மதம்
நியூயார்க்: அமெரிக்காவில், மருத்துவமனை நிர்வாகி மூலம் நோயாளிகளுக்கு நரம்பு ஊசி போட்ட இந்திய மருத்துவர் ஒருவர் தனது குற்றத்திற்காக இரண்டரை கோடி ரூபாய் அபராதம் செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த 2009-2010-ம் ஆண்டுகளில் உடல் பருமனை குறைப்பதற்கான சிறப்பு கிளினிக் நடத்தி வந்தவர் இந்திய மருத்துவர் ரவி சர்மா. தான் மருத்துவமனையில் இல்லாத சமயங்களில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு தனது மருத்துவமனை நிர்வாகியை ஊசி போட வைத்துள்ளார் ரவி சர்மா. ஆனால், மருத்துவரே ஊசி போட்டதாக போலி பில் வழங்கப் பட்டு வந்துள்ளது.
அதேபோன்று, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பலரை தேவையேயின்றி, ஸ்கேன் செய்ய வைத்துள்ளார். மேலும், இது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ரவி சர்மா மீது சுமத்தப்பட்டது. இதுதொடர்பாக அவரிடம் வேலை பார்த்த ஆஸ்பத்திரி நிர்வாகி டவெல், சுகாதாரத்துறையில் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து ரவி சர்மாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் முடிவில், அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து வழக்குகளில் இருந்து விடுபடுவதற்கு 4 லட்சம் டாலர்கள் தரவும், சுமார் 3 ஆண்டு காலம் சிறப்பு பயிற்சி பெறவும் ரவி சர்மாவுக்கு அறிவுறுத்தப் பட்டது. இதற்கு ரவி சர்மா சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நீதித்துறை உதவி வக்கீல் ஒருவர் கூறுகையில், "நரம்பு ஊசிகள் போன்றவற்றை தகுதிவாய்ந்த நபர்கள் மட்டுமே செலுத்த வேண்டும். ஆனால் தகுதியற்றவர்களை கொண்டு இப்படிப்பட்ட காரியங்களை அரங்கேற்றி, மக்களின் உயிரோடு விளையாடுவதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications