வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு உதவும் அமீரக வாழ் இந்தியர்கள்
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் ஜம்மு காஷ்மீர் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் மாநில மக்களுக்கு உதவ முன் வந்துள்ளனர்.
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்கள் மாநிலத்தில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உதவ முன்வந்துள்ளனர்.
அமீரகத்தில் வசிக்கும் ஜம்மு காஷ்மீர் மக்கள் துபாயில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்று அங்கு அமீரகத்திற்கான இந்திய தூதர் டி.பி. சீதாராம், கன்சல் ஜெனரல் அனுராக் பூஷன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றிய ராணுவம் மற்றும் அந்த நேரத்தில் ஹாட்லைன்களை அறிமுகப்படுத்திய இந்திய தூதர் மற்றும் கன்சல் ஜெனரலுக்கு காஷ்மீர் மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
காஷ்மீர் வெள்ள நிவாரண நிதிக்காக இந்திய தூதரகத்திடம் எம்.ஏ. யூசுப் அலி, பி.ஆர். ஷெட்டி ஆகியோர் ரூ. 1 கோடியும், ஷம்ஷீர் நிறுவனத்தின் துணை தலைவர் ரூ. 25 லட்சமும் அளித்தனர்.
அமீரகத்தில் வசிக்கும் ஜிப்ரான் மாண்டூ என்பவர் தனது மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது ஜம்மு காஷ்மீர் வந்து பலரை காப்பாற்றியுள்ளார். அவர் கூறுகையில், காஷ்மீரில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து திட்டமிட அமீரகத்தில் வசிக்கும் காஷ்மீர் மக்கள் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர் என்றார்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications