ஐஎஸ்ஐஎஸ் பயங்கரம்: பாக்தாத்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு.. 200க்கும் அதிகமானோர் பரிதாப சாவு
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நிகழ்த்திய குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-யை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் மத்திய பகுதியான கராடாவில் ஏராளமான கடைகள் உள்ளன. ரமலான் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. ரமலான் நோன்பு தொடர்பான வர்த்தகத்தில் மக்களும், வியாபாரிகளும் இருந்ததைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் இந்த கொடூரத் தாக்குதலை மேற்கொண்டனர்.

சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த வெடிகுண்டை தீவிரவாதிகள் வெடிக்க செய்தனர். பலத்த சத்தத்துடன் கார் வெடித்து சிதறியதில், வர்தக கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நேற்று நடந்த இந்த விபத்தில் 119 பேர் பலியாகினர். 170க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதேபோல் கிழக்கு பாக்தாத்திலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 பேர் பலியாகினர். 16-க்கும் மேற்பட்டோர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பலர் இறந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 200-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என கூறப்படுகிறது.
இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு அந்நாட்டின் பிரதமர் ஹய்தெர் அல் அபாதி கண்டனம் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில் பார்வையிட்ட அவர், நாடு முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications