கிம் ஜாங் உன்னுக்கு அடுத்த இடத்தில் இருந்த வடகொரிய ராணுவ அதிகாரி நீக்கம்.. ஏன் என்னாச்சு?
பியாங்கியாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அடுத்த இடத்தில் இருந்த வடகொரிய ராணுவ அதிகாரி பாக் ஜாங் சோன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இவருக்கு பதிலாக ரி யோங் கில் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் கூறுகின்றன. இந்த நீக்கம் எதற்காக நடந்தது என்பது குறித்து தெரியவில்லை. வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்.
இங்குள்ள ராணுவத்தை மீறி அதிபர் குறித்த தகவல்களோ அந்த நாடு எடுக்கும் முடிவுகளோ வெளியே துளி கூட கசியாது. அந்தளவுக்கு ஸ்ட்ரிக்ட்டாக இருக்கும். அதிபர் கிம் ஜாங் இரு முறை மக்கள் முன்பு தோன்றாமல் இருந்த போதெல்லாம் அவர் குறித்து பல வதந்திகள் வெளியாகின.

என்ன நடந்தது
ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது கடுகளவும் வெளியே வரவில்லை. இதற்கு ராணுவ அதிகாரியாக பதவி வகித்த பாக் ஜாங் சோன் என்றும் சொல்லப்படுகிறது. அதிபர் கிம்முக்கு அடுத்ததாக நாட்டில் அதிகாரம் வாய்ந்த நபராக கருதப்பட்டவர் ராணுவ அதிகாரி பாக் ஜாங் சோன் ஆவார்.

ராணுவ அதிகாரி
இப்படிப்பட்ட நிலையில் திடீரென ராணுவ அதிகாரி பாக் ஜாங் சோன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ரி யோங் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த திடீர் மாற்றத்திற்கான காரணங்கள் தெரியவில்லை. புத்தாண்டு தினத்தின் போது அதிபர் கிம் தனது தந்தை மற்றும் தாத்தாவின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட கும்சூசன் அரண்மனைக்கு சென்றார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புகைப்படத்திலும் ராணுவ அதிகாரி பாக் ஜாங் சோன் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம்
பியாங்கியாங்கில் புத்தாண்டு பார்ட்டிகள் களைகட்டும். இந்த பார்ட்டிகளின் போதுதான் ராணுவ அதிகாரிகளை மாற்றுவது, முக்கிய கொள்கை முடிவுகள் உள்ளிட்டவை குறித்து அறிவிக்கப்படும். இந்த பார்ட்டியில் தலை குனிந்தபடியே பாக் ஜாங் உட்கார்ந்திருக்கிறார். மற்ற நபர்கள் ராணுவ அதிகாரி விவகாரம் தொடர்பாக கைகளை உயர்த்துகிறார்கள். இதன் பின்னர் அவர் அமர்ந்திருந்த சீட் காலியாக உள்ளது. இவையெல்லாம் வடகொரிய நாட்டின் அரசு ஊடகம் ஒளிபரப்பிய காட்சிகளில் தெரியவந்தது.

பதவி உயர்வு
2015 இல் ஒரு ஸ்டார் கொண்ட கமாண்டராக இருந்த பாக் ஜாங் 2020 இல் 4 ஸ்டார்களை கொண்ட ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார். இதற்கு காரணம் நாட்டின் குறைந்த தூரம் வரை தாக்கும் ஏவுகணை தொழில்நுட்பத்தில் பாக் அளித்த பங்களிப்பிற்காக இந்த பதவி உயர்வு அவருக்கு கிடைத்தது.

அணு ஆயுத உருவாக்கம்
பின்னர் 2020 ஆம் ஆண்டு இறுதிகளில் அவர் பொலிட்பீரோவாக உயர்ந்தார், மார்ஷல் என்ற பட்டத்தையும் பெற்றார். 2023 ஆம் ஆண்டுக்கான நாட்டின் பாதுகாப்பு வியூகமாக அமெரிக்கா, தென் கொரியாவை எதிர்கொள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் ஒரு பெரிய அணு ஆயுதத்தை உருவாக்க கிம் ஜாங் உன், பாக் ஜாங்கை மாற்றியிருக்கலாம் என தெரிகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications