கிம் ஜாங் உன்னுக்கு அடுத்த இடத்தில் இருந்த வடகொரிய ராணுவ அதிகாரி நீக்கம்.. ஏன் என்னாச்சு?
பியாங்கியாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அடுத்த இடத்தில் இருந்த வடகொரிய ராணுவ அதிகாரி பாக் ஜாங் சோன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இவருக்கு பதிலாக ரி யோங் கில் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் கூறுகின்றன. இந்த நீக்கம் எதற்காக நடந்தது என்பது குறித்து தெரியவில்லை. வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்.
இங்குள்ள ராணுவத்தை மீறி அதிபர் குறித்த தகவல்களோ அந்த நாடு எடுக்கும் முடிவுகளோ வெளியே துளி கூட கசியாது. அந்தளவுக்கு ஸ்ட்ரிக்ட்டாக இருக்கும். அதிபர் கிம் ஜாங் இரு முறை மக்கள் முன்பு தோன்றாமல் இருந்த போதெல்லாம் அவர் குறித்து பல வதந்திகள் வெளியாகின.

என்ன நடந்தது
ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது கடுகளவும் வெளியே வரவில்லை. இதற்கு ராணுவ அதிகாரியாக பதவி வகித்த பாக் ஜாங் சோன் என்றும் சொல்லப்படுகிறது. அதிபர் கிம்முக்கு அடுத்ததாக நாட்டில் அதிகாரம் வாய்ந்த நபராக கருதப்பட்டவர் ராணுவ அதிகாரி பாக் ஜாங் சோன் ஆவார்.

ராணுவ அதிகாரி
இப்படிப்பட்ட நிலையில் திடீரென ராணுவ அதிகாரி பாக் ஜாங் சோன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ரி யோங் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த திடீர் மாற்றத்திற்கான காரணங்கள் தெரியவில்லை. புத்தாண்டு தினத்தின் போது அதிபர் கிம் தனது தந்தை மற்றும் தாத்தாவின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட கும்சூசன் அரண்மனைக்கு சென்றார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புகைப்படத்திலும் ராணுவ அதிகாரி பாக் ஜாங் சோன் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம்
பியாங்கியாங்கில் புத்தாண்டு பார்ட்டிகள் களைகட்டும். இந்த பார்ட்டிகளின் போதுதான் ராணுவ அதிகாரிகளை மாற்றுவது, முக்கிய கொள்கை முடிவுகள் உள்ளிட்டவை குறித்து அறிவிக்கப்படும். இந்த பார்ட்டியில் தலை குனிந்தபடியே பாக் ஜாங் உட்கார்ந்திருக்கிறார். மற்ற நபர்கள் ராணுவ அதிகாரி விவகாரம் தொடர்பாக கைகளை உயர்த்துகிறார்கள். இதன் பின்னர் அவர் அமர்ந்திருந்த சீட் காலியாக உள்ளது. இவையெல்லாம் வடகொரிய நாட்டின் அரசு ஊடகம் ஒளிபரப்பிய காட்சிகளில் தெரியவந்தது.

பதவி உயர்வு
2015 இல் ஒரு ஸ்டார் கொண்ட கமாண்டராக இருந்த பாக் ஜாங் 2020 இல் 4 ஸ்டார்களை கொண்ட ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார். இதற்கு காரணம் நாட்டின் குறைந்த தூரம் வரை தாக்கும் ஏவுகணை தொழில்நுட்பத்தில் பாக் அளித்த பங்களிப்பிற்காக இந்த பதவி உயர்வு அவருக்கு கிடைத்தது.

அணு ஆயுத உருவாக்கம்
பின்னர் 2020 ஆம் ஆண்டு இறுதிகளில் அவர் பொலிட்பீரோவாக உயர்ந்தார், மார்ஷல் என்ற பட்டத்தையும் பெற்றார். 2023 ஆம் ஆண்டுக்கான நாட்டின் பாதுகாப்பு வியூகமாக அமெரிக்கா, தென் கொரியாவை எதிர்கொள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் ஒரு பெரிய அணு ஆயுதத்தை உருவாக்க கிம் ஜாங் உன், பாக் ஜாங்கை மாற்றியிருக்கலாம் என தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications