கிம் கர்தாஷியான் துப்பாக்கி முனையில் கடத்தல்- பாரிசில் பரபரப்பு
பாரிஸ் : அமெரிக்கவின் டிவி நடிகையான கிம் கர்தாஷியன் பாரீஸ் ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தபோது துப்பாக்கி முனையில் இருவர் கடத்தி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு கடத்தி செல்லும்போது அவரை கடுமையாக தாக்கியதாகவும் அதனால் எந்தக் காயமும் அவருக்கு ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
கிம் கர்தாஷியான் அமெரிக்க டிவி நடிகையாகவும் பிரபல மாடலாகவும் திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், பாரீசில் நடந்து வரும் மாடல் ஷோவில் கலந்து கொள்வதற்காக தனது அம்மா, சகோதரிகளுடன் வந்திருந்த கிம் ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். அப்போது போலீஸ் உடையில் முகமூடி அணிந்து வந்த இருவர் அவரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் ஞாயிறன்று மாலை நடந்துள்ளது. கிம் கார்தஷியானை கடத்தியபோது, மர்மநபர்கள் அவரை தாக்கியதாகவும், எனினும் அவருக்கு எந்தவிதக் காயங்களும் ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து நியூயார்க் நகரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த கிம்மின் கணவர் கன்யே வெஸ்ட் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து பாரீஸ் விரைந்துள்ளதாக பாரிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி போஸ், ரியாலிட்டி ஷோவுக்காக நிர்வாண செல்ஃபி எடுத்து இணையத்தில் பதிவிடுவது என ரசிகர்களை சூடேற்றி வந்தார் கிம். கிம் கார்தாஷியானின் செயல்பாடுகளை பிடிக்காத யாரோதான் கடத்தி சென்றிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications