ஊழல் குற்றச்சாட்டு.. மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் அதிரடி கைது
கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் அந்த நாட்டு ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நஜிப் ரசாக் அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை அவரை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ஆஜர்படுத்த உள்ளனர்.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுமார் 628 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரசு நிதியை தனது சொந்த கணக்கில் வரவு வைத்துக் கொளண்டதற்காக, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நஜீப் ரசாக் மீது ஏற்கனவே இவ்வாண்டு மே மாதம் புதிய அரசாங்கம் அமைந்ததும், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதுதொடர்பான வழக்கில் அவரையும் அவரது மனைவியையும் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
1957ம் ஆண்டு முதல் ஆளும் கட்சி கூட்டணியே மலேசியாவில் ஆட்சி அமைத்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக இவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் நஜீப் ரசாக் தோல்வியை சந்தித்தார். மகாதீர் முகமது தலைமையிலான புதிய அரசு பழைய ஊழல் வழக்குகளை தோண்டி ஒன்றொன்றாக எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications