திடீர் திருப்பம்.. மொகுல் சோக்சி இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும்.. கோர்டில் டொமினிகா அரசு வாதம்
டொமினிகா: பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14,000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்துவிட்டு தப்பியோடிய வைர வியாபாரி மொகுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்று டொமினிகன் அரசு அந்நாட்டு நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.
டொமினிகன் நாட்டு உச்சநீதிமன்றத்தில் மொகுல் சோக்ஸி (62 வயது) தன்னை ஆன்டிகுவாவில் இருந்து கடத்திக்கொண்டு வந்ததாக மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் இந்த மனுவை விசாரிக்க கூடாது என்றும், அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு வழக்கறிஞ்ர் வாதிட்டுள்ளார், மத்திய அரசுக்கு இநத் வாதம் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

என்ன நடக்கும்
ஆனால் ஆன்டிகுவாவிலிருந்து கடத்தப்பட்டதாக மொகுல் சோக்ஸியின் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
மொகுலை ஆன்டிகுவாவில் இருந்து கடத்தி டொமினிகாவிற்கு கொண்டு வந்துள்ளனர் என்று வாதிட்டுள்ளனர்.. நீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டால், அவர் மீண்டும் ஆன்டிகுவாவுக்கு அனுப்பப்படுவார், வழக்கு இன்று மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.

எதிர்க்கட்சிகள் சப்போர்ட்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14,000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த விவாகரம் வெளியே தெரியவந்தால் வைர வியாபரியான மொகுல் சோக்ஸி ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை பெற்று, இந்தியாவில் இருந்து தப்பிவந்துவிட்டார். அவரை இந்தியாவிற்கு நேரடியாக நாடு கடத்த வேண்டும் என்று டொமினிகா அரசிடம் ஆன்டிகுவா பிரதமர் யோசனை கூறியுள்ளார். ஆனால் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

டொமினிகாவில் முகாம்
இந்நிலையில் இந்திய அரசு எப்படியாவது டொமினிகா நாட்டில் இருந்து மொகுல் சோக்ஸியை ஆன்டிகுவாவிற்கு செல்லவிடாமல் இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறது. சிபிஐ மற்றும் அமலாக்க அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர். நாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்

முடிவு தெரியும்
கடந்த வாரம் இந்தியாவுக்கு ஒப்படைக்கப்படுவதிலிருந்து தப்பிக்க கியூபா செல்வதற்கு மொகுல் சோக்ஸி டொமினிகா வழியாக செல்ல முயன்றுள்ளார். இதையடுத்து சட்டவிரோதமாக நாட்டில் நுழைந்ததாக கைது செய்யப்பட்ட மெஹுல் சோக்ஸி, வீடியோ-கான்பிரன்ஸ் வழியாக நீதிமன்றத்தின் நேற்றைய விசாரணையில் கலந்து கொண்டார். அவர் தற்போது ஒரு மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. இன்று மொகுல் சோக்ஸி நாடு கடத்தப்படுவாரா என்பது தெரிந்துவிடும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications