திடீர் திருப்பம்.. மொகுல் சோக்சி இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும்.. கோர்டில் டொமினிகா அரசு வாதம்
டொமினிகா: பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14,000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்துவிட்டு தப்பியோடிய வைர வியாபாரி மொகுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்று டொமினிகன் அரசு அந்நாட்டு நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.
டொமினிகன் நாட்டு உச்சநீதிமன்றத்தில் மொகுல் சோக்ஸி (62 வயது) தன்னை ஆன்டிகுவாவில் இருந்து கடத்திக்கொண்டு வந்ததாக மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் இந்த மனுவை விசாரிக்க கூடாது என்றும், அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு வழக்கறிஞ்ர் வாதிட்டுள்ளார், மத்திய அரசுக்கு இநத் வாதம் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

என்ன நடக்கும்
ஆனால் ஆன்டிகுவாவிலிருந்து கடத்தப்பட்டதாக மொகுல் சோக்ஸியின் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
மொகுலை ஆன்டிகுவாவில் இருந்து கடத்தி டொமினிகாவிற்கு கொண்டு வந்துள்ளனர் என்று வாதிட்டுள்ளனர்.. நீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டால், அவர் மீண்டும் ஆன்டிகுவாவுக்கு அனுப்பப்படுவார், வழக்கு இன்று மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.

எதிர்க்கட்சிகள் சப்போர்ட்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14,000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த விவாகரம் வெளியே தெரியவந்தால் வைர வியாபரியான மொகுல் சோக்ஸி ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை பெற்று, இந்தியாவில் இருந்து தப்பிவந்துவிட்டார். அவரை இந்தியாவிற்கு நேரடியாக நாடு கடத்த வேண்டும் என்று டொமினிகா அரசிடம் ஆன்டிகுவா பிரதமர் யோசனை கூறியுள்ளார். ஆனால் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

டொமினிகாவில் முகாம்
இந்நிலையில் இந்திய அரசு எப்படியாவது டொமினிகா நாட்டில் இருந்து மொகுல் சோக்ஸியை ஆன்டிகுவாவிற்கு செல்லவிடாமல் இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறது. சிபிஐ மற்றும் அமலாக்க அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர். நாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்

முடிவு தெரியும்
கடந்த வாரம் இந்தியாவுக்கு ஒப்படைக்கப்படுவதிலிருந்து தப்பிக்க கியூபா செல்வதற்கு மொகுல் சோக்ஸி டொமினிகா வழியாக செல்ல முயன்றுள்ளார். இதையடுத்து சட்டவிரோதமாக நாட்டில் நுழைந்ததாக கைது செய்யப்பட்ட மெஹுல் சோக்ஸி, வீடியோ-கான்பிரன்ஸ் வழியாக நீதிமன்றத்தின் நேற்றைய விசாரணையில் கலந்து கொண்டார். அவர் தற்போது ஒரு மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. இன்று மொகுல் சோக்ஸி நாடு கடத்தப்படுவாரா என்பது தெரிந்துவிடும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications