"அம்மா முடியலை.. பயமா இருக்கு.." உக்ரைன் போரில், மரணத்துக்கு முன் ரஷ்ய வீரர் அனுப்பிய மெசேஜ்
கீவ்: ‛‛அம்மா முடியவில்லை. நான் பயந்துள்ளேன். உக்ரைனில் உண்மையான போர் நடந்து வருகிறது. நாங்கள் உக்ரைன் நகர் மட்டுமின்றி பொதுமக்களையும் குறிவைத்து குண்டுகள் வீசி வருகிறோம்'' என ரஷ்ய ராணுவ வீரர் தனது மரணத்துக்கு முன்பு தாய்க்கு குறுஞ்செய்தி அனுப்பிய தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. 6 நாளாக இன்றும் ரஷ்ய படைகள் தாக்குதலை தொடர்ந்து குண்டுகளை வீசுகின்றன. இதனால் உக்ரைன் நகரங்களில் போர் மேகம் இன்னும் கலையவில்லை. தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இதனால் அமைதியான வாழ்க்கையை இழந்து உக்ரைன் மக்கள் அவதிப்படுகின்றனர். இதையடுத்து சொந்த நாட்டை விட்டுவிட்டு அண்டை நாடுகளில் அடைக்கலம் தேடி வருகின்றனர்.

ஐநா அவசர கூட்டம்
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு அமெரிக்காவில் அவசரமாக கூடியது. 40 ஆண்டுகளுக்கு பின் ஐநா பொதுசபையின் அவசர கூட்டம் கூடியது. இதில் ஐ.நாவுக்கான உக்ரைன் தூதர் செர்ஜி கிஸ்லிட்ஸால் பங்கேற்றார். ரஷ்யாவின் போர் நடவடிக்கை, உக்ரைன் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்து கூறி பேசினார்.

ரஷ்ய வீரரின் குறுஞ்செய்தி
மேலும் அவர் உருக்கமான செய்தி ஒன்றை வாசித்து காண்பித்தார். ரஷ்யா-உக்ரைன் போரில் உயிரிழந்த ரஷ்ய ராணுவவீரர் ஒருவர் தனது தாய்க்கு அனுப்பிய குறுஞ்செய்தியின் ‛ஸ்கீரின்ஷாட்' விபரங்களை வெளியிட்டார். போர் தொடர்பான ரஷ்யாவின் நிலைப்பாடு, கொடூரம் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தது. இதுபற்றி உக்ரைன் தூதர் செர்ஜி கிஸ்லிட்ஸால் கூறியதாவது:

பயமாக உள்ளது
ரஷ்யாவின் ராணுவ வீரர் ஒருவருக்கு அவரது தாய் குறுஞ்செய்தி செய்கிறார். அதில், ‛‛ஏன் நீண்டகாலமாக குறுஞ்செய்தி அனுப்பவில்லை. உனக்கான பார்சல் அனுப்பவா'' என கேட்கிறார். இதற்கு அந்த ரஷ்ய வீரர், ‛‛ நான் கிரிமியாவில் இல்லை. தற்போது நான் உக்ரைனில் இருக்கிறேன். இங்கு உண்மையான போர் நடந்து வருகிறது. நான் பயந்துள்ளேன். நாங்கள் உக்ரைன் நகர் மட்டுமின்றி பொதுமக்களையும் குறிவைத்து குண்டுகள் வீசி வருகிறோம். உக்ரைன் மக்கள் எங்களை வரவேற்பார்கள் என்று ரஷ்யாவில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் எங்களின் வாகனங்களின் முன்பு விழுந்து எங்களை தடுத்து நிறுத்துகிறார்கள். அவர்கள் எங்களை பாசிஸ்டுகள் (பொதுவுடமை எதிர்ப்பாளர்கள்) என கூறுகின்றனர். அம்மா இது மிகவும் கொடுமையானதாக உள்ளது. நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறேன்'' என குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளார். அதன்பின் அவர் இறந்தார்.

துயரத்தின் அளவு
இதன்மூலம் உக்ரைன் போர் கள துயரங்களை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளலாம். மேலும் துயரங்களின் அளவை துல்லியாக அறிய விரும்பினால் இந்த பொதுக்கூட்டத்தில் ஒவ்வொரு நாட்டின் உறுப்பினர்களுக்கு அடுத்ததாக 30 ரஷ்ய வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டு இருப்பதாக நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். இதுதவிர 100க்கும் அதிகமான உக்ரைன் மக்களும், டஜன் கணக்கில் குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். இது இன்னும் நிறைவு பெறாமல் நீண்டு கொண்டே செல்கிறது. இதனால் ரஷ்யாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஒவ்வொரும் எடுக்க வேண்டும்'' என உருக்கமாக கூறியுள்ளார்.

முறியடிப்பு
முன்னதாக நடந்த ஐ.நா. பாதுகாப்பு குழு கூட்டத்தில் போர் தொடர்பான ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வியடைந்தது. இதில் இந்தியா பங்கேற்காமல் நடுநிலை வகித்த நிலையில் ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை












Click it and Unblock the Notifications