சுவிட்சர்லாந்தில் திருவாதிரை திருவிழா - ஞானலிங்கேசுவரத்தில் கொண்டாட்டம்
சுவிஸ் நாட்டின் ஞானலிங்கேச்சுரத்தில் 01. 01. 2018 திங்கட்கிழமை திருவெம்பாவை, முழுமதி வழிபாட்டுடன் வழிபாடுகளுடன் புத்தாண்டும் இனிதாக கொண்டாடப்பட்டது.
பேர்ன்: சுவிட்சர்லாந்தின் தலைநகரான பேர்னில் உள்ள ஞானலிங்கேசுவரர் திருக்கோவிலில் புத்தாண்டு பிறந்த நாளான நள்ளிரவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆருத்ரா தரிசனம் என்னும் திருவாதிரைத் திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றது.
புத்தாண்டு பிறப்பன்று கோவில்களில் சென்று இறைவனை வழிபடு மரபு. அனைத்து மதத்தினரும் அவரவர் தெய்வங்களை வணங்குகின்றனர்.
சுவிட்சர்லாந்தில் உள்ள இந்துக்கள் ஞானலிங்கேசுவரர் ஆலயத்தில் புத்தாண்டினை கொண்டாடினர். அதே நாளில் திருவாதிரை திருவிழாவும் கொண்டாடப்பட்டது.

திருவெம்பாவை விழா
பொதுப்புத்தாண்டு 2018 இம்முறை சைவத்தமிழ் மக்களுக்கு பல்சிறப்புக்களுடன் தோன்றியுள்ளது. ஆடல்வல்லானை திருவண்ணாமலையில் இருந்து பாடிப்பணிந்து, தன் தலையில் தீட்கை அளித்த சிவத்தை நோக்கி திருப்பயணமாக நடந்து, தில்லையில் சிவத்துடன் கலந்த பெருமான் மாணிக்கவாசகர் அளித்த திருவெம்பாவை இம்முறை புத்தாண்டுடன் இணைந்திருந்தது.

முழுமதி வழிபாடு
அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் 01. 01. 2018 திங்கட்கிழமை திருவெம்பாவை, முழுமதி வழிபாட்டுடன் வழிபாடுகளுடன் புத்தாண்டும் இனிய நினைவாக தடம் பதித்துள்ளது.

பக்தர்கள் வழிபாடு
பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் நிறைந்து, தாயகத்தின் நெருக்கத்தை புலம்பெயர் நாட்டிலும் கண்டனர், மகிழ்வுடன் இனிமை அளித்த பொன்னான பொழுதாகப் பொன்னம்பலவன் முன் நிறைத்தனர்.

இறைவன் வழிபாடு
சொல்லப்படும் வசனங்கள் மந்திரங்கள் உணர்ந்து சொல்லி, அவற்றின் பொருள் என்ன சொல்பவர் தான கேள்வி எழுப்பி அறிவை மேலும் பெருக்கி, செய்யப்படும் சடங்குகள் யாவை அதன் உள்ளுறை என்ன? எனக் கேள்வியும் கேட்கச் செய்து, ஏன் செய்யப்படுகின்றன? ஞானவழியில் தேவைத்து, இறைவனை எழுந்தருளச் செய்து கருவறையில் செந்தமிழித் திருமறை வழிபாடு சிறப்பாக அமைந்தது.

ஆதிரை பெருநாள்
02. 1. 2018 செவ்வாய்க்கிழமை காலை 04.00 மணிமுதல் ஆதிரைப் பெருநாள் திருவாதிரை வழிபாடு மிகு சிறப்புடன் நடைபெற்றது. 108 குடங்களில் நீர்சுமந்தேத்தி, 1008 சிவமந்திரத்தால் தெய்வத்தமிழில் ஓதி, தமிழ் மொழியில் அருளாளர்கள் பாடிய பாடல்களால் பல அற்புதங்களால் நடந்ததை நினைவு படுத்துவதாக அமைய, பெருவழிபாடு நடைபெற்றது.

திருவாதிரை திருநாள்
திருமறைக்காட்டில் கதவை திறக்கப் பாடினார் அப்பர். மூடப்பாடினார் சம்பந்தர், மாணிக்க வாசகர் அருளிய பால்களை தேன் என சிவபெருமான் வழிமொழிந்தார், இன்று ஞானலிங்கேச்சுரத்தில் அனைவர் உள்ளத்தையும் திறக்க திருவாதிரை நிகழ்வு சிறப்புற நடந்தது. யாவரும் தம் கைகளால் இறைவனுக்கு நேரடியாக வழிபாட்டினை ஆற்றினர்.

அன்னதானம்
ஆடல்வல்லான் சுவிட்சர்லாந்தின் பேர்ன்நகர் ஐரோப்பாத்திடலில் தில்லை அம்பலத்தில் எழுந்தவடிவில் ஆடிவர, தமிழுக்கு கழகம் கண்ட ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கப் பெருமானிற்று 'கொன்றைச் சடையார்க்கு ஒன்றைத் தெரிய கொஞ்சித் தமிழால் பகர்வோனே' என அருணகிரியார் பாடிய திருப்பொருளாகத் தமிழ் எங்கும் ஒலிக்க 108 அருளமுது படைத்தளித்து நிறைவில் அடியார்களுக்கு அருளுணவு அளித்து வழிபாடுகள் நண்பகல் 12.00 மணிக்கு நிறைவுற்றன.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications