அணு ஆயுதங்களைக் கொண்டு எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்... மிரட்டும் பாக்
இஸ்லாமாபாத் : எங்களிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை இந்தியா மறந்துவிட்டது என்றும், அதனைக் கொண்டு எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்று எங்களுக்கு தெரியும் என்றும், பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் மிரட்டல் விடுக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான 2 நாள் பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. பாகிஸ்தானின் பிடிவாத நடவடிக்கையால் பேச்சுவார்த்தை கடைசி நேரத்தில் ரத்தானது. எனினும், இந்தியா கடுமையான நிபந்தனைகளை விதித்ததால் தான் பேச்சுவார்த்தையை ரத்து செய்ததாக பாகிஸ்தான் மழுப்பலாக கூறி வருகிறது.

இதுபற்றி நேற்று இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் கூறியதாவது...
பேச்சுவார்த்தை ரத்து ஆனதற்கு பாகிஸ்தான் காரணம் இல்லை. கடந்த ஆண்டு ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பிரதமர் மோடி, இந்த பிராந்தியத்தின் சக்தி வாய்ந்த நாடாக இந்தியாவை நினைத்துக் கொள்கிறார். ஆனால் பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருக்கிறது என்பதை அவர் மறந்துவிட்டார்.
மோடியின் இந்தியா இந்த பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நாடுபோல் நடந்து கொள்ளுமேயானால், நாங்களும் அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுதான். எங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும்.
இந்தியா தனது விருப்பப்படி இயல்பான சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று விரும்புகிறது. அப்படி என்றால் வர்த்தகம், போக்குவரத்து குறித்துதான் பேச முடியும்.
காஷ்மீர் ஒரு பிரச்சினை இல்லை என்றால் எல்லையில் 7 லட்சம் படை வீரர்களை இந்தியா குவித்து வைத்திருப்பது ஏன்?... இருநாடுகளுக்கும் இடையே காஷ்மீர் ஒரு பிரச்சினையாக உள்ளது என்பதையும் அதற்கு தீர்வு காணப்படவேண்டும் என்பதையும் சர்வதேச நாடுகள் விரும்புகின்றன.
காஷ்மீர் மக்கள் தங்களுடைய தலைவிதியை நிர்ணயித்துக்கொள்ள பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா முன்வரவேண்டும்.
தீவிரவாதம் தொடர்பான பேச்சைக் கண்டு பாகிஸ்தான் ஓடிவிடவில்லை. பாகிஸ்தானில் இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா' தீவிரவாதத்தை தூண்டிவிடுவதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன.
இவ்வாறு பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications