பெஷாவர் தாக்குதல் எதிரொலி... துப்பாக்கி வைத்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு பாக். அனுமதி!
பெஷாவர்: பெஷாவர் பள்ளித் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்க்வா மாகாண அரசு அங்குள்ள தனியார் பள்ளிகள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளிக்குள் கடந்த 16-ம்தேதி புகுந்த தீவிரவாதிகள், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். இதில், 132 பள்ளிக்குழந்தைகள் உள்பட 145 பேர் பலியாகினர்.

உலகையையே உறையச் செய்த இத்தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிகளின் பாதுகாப்பை அதிகரிக்க ஆலோசனை நடத்தி வருகிறது பாகிஸ்தான் அரசு. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்க்வா மாகாண அரசு அங்குள்ள தனியார் பள்ளிகள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க உள்ளது.
ஏற்கனவே இங்குள்ள பள்ளிகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் வேலையில் அம்மாகாண அரசு ஈடுபட்டு வருகிறது. இப்பணிகள் இன்னும் சில தினங்களில் முடிவடையும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த மாகாணத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் வைப்பதற்கு அனுமதி கேட்டு கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து பள்ளிக்குழந்தைகள், ஆசிரியர்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், முந்தைய தாக்குதல் போன்ற தாக்குதல் நடைபெறாமல் இருக்கவும் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
துப்பாக்கி வைத்துக் கொள்ளும் அனுமதி கோரியுள்ள பள்ளிகளுக்கு போலீஸ் மற்றும் உள்துறை அதிகாரிகள் இடம்பெறும் குழு ஒன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளும். பின்னர் அப்பள்ளிக்கு துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இது தவிர கூடுதல் பாதுகாப்பிற்குத் தேவையான பாதுகாப்பு காவலர்களை பணியமர்த்துதல் பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பு என்று மாகாண தரப்பில் இருந்து தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications