விரைவில் கஞ்சா பீட்சா விற்பனை.. எங்க தெரியுமா..?
தாய்லாந்து: போதை பொருளா? அல்லது மருத்துவ குணம் கொண்ட மூலிகையா? என இருவேறு தரப்புகளிலும் கடும் வாதங்கள் கஞ்சாசெடி குறித்து வைக்கப்படுகிறது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக பயன்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் அது தடை செய்யப்பட்ட போதை பொருளாக கருதப்படுகிறது.
தடை செய்யப்பட்டிருக்கும் போதும் இந்தியாவில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், அது சார்ந்து நிறைய குற்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கஞ்சா வைத்திருப்பதும் பயிரிடுவது, விற்பனை செய்வதும், பயன்படுத்துவதும் கடும் குற்றமாக கருதப்படுகிறது.

இது ஒருபுறம் இருந்தாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையும் பயன்படுத்துதல் அதிகரித்துக்கொண்டே வருகிறது ஒரு நாளைக்கு சராசரியாக 10 முதல் 20 வழக்குகள் பதியப்படுகின்றன. நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும், இதுவரை கஞ்சா புழக்கத்தை ஒழிக்க முடியாமல் போலீசாரும் அரசும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
மிகவும் ஆபத்தான போதை பொருள் பட்டியலில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் கஞ்சா நீக்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவிலும் கஞ்சா பயன்பாட்டுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்படும் என எதிர்பார்த்தாலும் தற்போது வரை மத்திய மாநில அரசுகள் அதுகுறித்து விவாதத்தை கூட தொடங்கவில்லை.
இந்நிலையில் தாய்லாந்தில் உள்ள பீட்சா நிறுவனத்தில் கிரேசி ஹேப்பி பீட்சா என்ற பெயரில் விற்கப்படும் பீட்சாவில் கஞ்சாவும் சேர்த்து தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக அரிமுகப்படுத்தப்படவுள்ளது.. புகழ்பெற்ற தாம் யெம் சூப்பின் சுவை கொண்ட இந்த வகை கிரேசி ஹேப்பி பீட்சா உடன் நன்கு வறுக்கப்பட்ட கஞ்சாவும் சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படும்,ஆனால் சாப்பிட்டுவிட்டு தூங்கி விழத்தான் வாய்ப்புள்ளது.
இந்தியமதிப்பில் சுமார் 1,200 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த பீட்சாவில் எக்ஸ்ட்ரா சீஸ் போல எக்ஸ்ட்ரா கஞ்சா வேண்டும் என்றால் 200 முதல் 300 ரூபாய் வரை கொடுத்தால் கூடுதலாக இரண்டு முதல் மூன்று கஞ்சா இலைகள் சேர்த்து வழங்கப்படும்.
தாய்லாந்தின் அண்டை நாடான கம்போடியாவிலும் கஞ்சா பீட்சா விற்பனைக்கு உள்ள நிலையில், தாய்லாந்திலும் தற்போது அவ்வகை பீட்சா விற்கப்படவுள்ளது. ஆனாலும் அங்கும் கஞ்சா சட்ட விரோதமானது தான். அதே நேரத்தில் மருத்துவத்தேவை மற்றும் தனிநபர்கள் மட்டும் தங்கள் சொந்த நலனுக்காக குறைந்த அளவிலான கஞ்சா செடிகளை வளர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications