டென்ஷனைக் குறைத்தால்தான் உறவு சீர்படும்... ஷெரீப்புக்கு மன்மோகன் அறிவுரை
நியூயார்க்: எல்லைப் பகுதியில் பதட்டத்தைக் குறைத்தால்தான் இரு நாட்டு உறவுகள் சிறப்பாக இருக்க முடியும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் பிரதமர் மன்மோகன் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
நியூயார்க் வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து நேற்று பேசினார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கிடையே சமீப காலமாக நிலவி வரும் இறுக்கம் மற்றும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில் நடந்தது.
இந்த சந்திப்பின்போது எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும், எல்லைப் பகுதியில் பதட்டத்தைக் குறைக்க வேண்டும், வன்முறையை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை பிரதமர் மன்மோகன் சிங் ஷெரீப்பிடம் முன்வைத்தார்.

இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் வன்முறை மற்றும் பதட்டத்தைக் குறைக்க இரு தரப்புமே ஒப்புக் கொண்டன. இதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவதாகவும் இரு தரப்பும் முடிவெடுத்துள்ளன.
மேலும், இரு நாட்டுப் பிரதமர்களும் அடுத்தவர் நாட்டுக்கு விஜயம் செய்யவும் ஒப்புக் கொண்டனர். இருப்பினும் இந்த பயண தேதி அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எஸ்.எஸ்.மேனன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு தரப்பு உறவும் தொடர வேண்டுமானால், சிறப்பாக இருக்க வேண்டுமானால் இருநாட்டு எல்லைப் பகுதியிலும் அமைதி நிலவ வேண்டியது அவசியம், வன்முறை குறைய வேண்டியது அவசியம் என்று இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர், ஏற்றுக் கொண்டனர்.
பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் சுமூகமாக இருந்தது. பயனுள்ளதாக இருந்தது. இருப்பினும் இந்தப் பேச்சுவார்த்தையின் பலன் போகப் போகத்தான் தெரியும்.
மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 166 பேர் பலியாகக் காரணமாக அமைந்தவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் உறுதியளித்துள்ளார் என்றார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications