பொருளாதார குற்றவாளிகளை ஒப்படைக்க இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவிடம் மோடி வலியுறுத்தல்!
பொருளாதார குற்றவாளிகளை ஒப்படைக்க இங்கிலாந்து பிரதமர் தெரா மேவிடம் வலியுறுத்தினார் பிரதமர் மோடி.
ஹாம்பர்க்: பொருளாதார குற்றங்களில் தொடர்புடையவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
ஹெர்மனியின் ஹாம்பர்க் நகரில் ஜி-20 நாடுகளின் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அம்மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவை நேற்று மோடி சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பின் போது பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டோரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதில் இங்கிலாந்து ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இத்தகவலை வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொழிலதிபர் விஜய் மல்லையா, ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி ஆகியோர் மீது இந்தியாவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் இருவரும் இந்தியாவைவிட்டு தப்பி ஓடி இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
PM @narendramodi meets UK PM @theresa_may on sidelines of #G20. Asks for UK's cooprn for return of escaped Indian economic offenders pic.twitter.com/VAwIp5ySvo
— Gopal Baglay (@MEAIndia) July 8, 2017
அண்மையில் விஜய் மல்லையா இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார். ஆனால் அடுத்த சில மணிநேரங்களிலேயே அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை!












Click it and Unblock the Notifications