பிரேசிலில் சீன அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!
போர்ட்டாலிசா: பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அம்மாநாட்டுக்கு வருகை தந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு வர்த்தகம், எல்லை விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாடு பிரேசிலில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இம்மாநாட்டுக்கு வருகை தந்த சீனா அதிபர் ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இருவரும் சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இப்பேச்சுவார்த்தைகளின் போது எல்லையில் சீனா மேற்கொள்ளும் ஊடுருவல்கள் குறித்த கவலையை பிரதமர் மோடி தெரிவித்தார். அதன் பின்னர் கைலாஸ்- மானசரோவர் யாத்திரைக்கான மாற்றுவழி குறித்து இருவரும் விவாதித்தனர். மேலும் இருதரப்பு வர்த்தகம் தொடர்பாகவும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
நாட்டின் பிரதமராக பதவியேற்ற பின்னர் சீனா அதிபர் ஜின்பிங்கை நரேந்திர மோடி சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications